India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம் நகர்புற வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க வரும் 21 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அமைப்பாளர் பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு, கணினி திறன்கள் முடித்திருக்க வேண்டும். அவர்கள் வரும் 21 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என கலெக்டர் தெரிவித்துள்ளார.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளை (அக்.19) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட்ட உள்ளன. திருக்கோவிலூர், சேந்தநாடு, வானாபுரம், எடுத்தவாய் நத்தம், அக்ரபாளையம், ஒடுவான்குப்பம், மேலந்தல், பாளையம், கள்ளக்குறிச்சி, எம்மாப்பர், அக்ரபாளையம், நீதிமன்றம், தண்டலை, கல்லாநத்தம், உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை செய்யப்படும்
வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை தொடரும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்ச்சி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 19ஆம் தேதி மதியம் 3 மணியளவில் அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாகவும், முதன்முறையாக துணை முதல்வராக பதவியேற்ற பின் கள்ளக்குறிச்சி வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பளிக்க திமுகவினர் தயாராகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அக்.19ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். இதையடுத்து, கள்ளக்குறிச்சி டோல்கேட் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் வடக்கு மாவட்டம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் உதவி சூரியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மக்கள் தாட்கோ மூலமாக கடன் உதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இன்று காலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெற்றது. எந்த விதமான கடன் உதவிக்கு விண்ணப்பித்துள்ளார்கள் மற்றும் கடன் உதவி அளித்தால் மீண்டும் பணம் செலுத்துவார்களா என்பது குறித்து நேர்முகத் தேர்வு மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் நடைபெற்றது.
நல்லாத்துார் பாவாடை என்பவரின் கூரைவீடு, கூத்தக்குடி குள்ளம்மாளின் தொகுப்பு வீடு, மூலசமுத்திரம் வீரமணியின் தொகுப்பு வீடு, எ.சாத்தனுார் பாவாடை என்பவரின் ஓட்டு வீடு, பெருமாள் மனைவி வெள்ளியம்மாளின் அட்டை வீடு உள்ளிட்ட 5 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த ரங்கநாயகி என்பவர் மூக்கில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளி தேடப்பட்ட நிலையில், கொலை குற்றவாளியான சுரேஷ் என்பவரை டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் 2024-25 ஆண்டு கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 4200 வீடுகள் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகளிடம் தனி நபர்கள் சிலர் வீடு வாங்கித் தருவதாக கூறி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சில புகார்கள் பெறப்பட்டுள்ளன. இது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது 1994 ஊராட்சி சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.