Kallakurichi

News October 28, 2024

லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவிக்கலாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, DSP- 99948 98628, INS – 94981 68555, office – 04251 294600, Mail id: dspkkidvac.tnpol@gov.in  பொதுமக்கள் நம்பரை பயன்படுத்தி தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 28, 2024

கள்ளக்குறிச்சியில் உதவித் தொகை வழங்கல்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மிசன் வத்சால்யா திட்டத்தின் கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு நிதி ஆதரவு உதவித் தொகைகளை இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி உள்ளிட்டோர் வழங்கினர்.

News October 28, 2024

ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று  ஊழல் விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதி மொழியினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News October 28, 2024

மாசில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு ஊர்தி

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று மாசிலா தீபாவளி பண்டிகை குறித்த விழிப்புணர்வு உறுதியினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் கொடியை செய்து துவக்கி வைத்தார். இதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலருடன் இருந்தனர்.

News October 28, 2024

கல்வராயன்மலையில் மதுவிலக்கு காவல் நிலையம் ?

image

கல்வராயன்மலையில் மதுவிலக்கு காவல் நிலையம் அமைக்க விழுப்புரம் சரக டிஐஜி நடவடிக்கை எடுப்பாரா என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. போலீசார் கல்வராயன்மலைக்கு சென்று அங்கு தகவல் சேகரிப்பது கடினமாகவே இருந்து வருகிறது. இதனால், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் வகையில் கல்வராயன்மலையிலேயே மதுவிலக்கு காவல் நிலையம் ஒன்று புதியதாக தொடங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News October 27, 2024

ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (27.10.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 27, 2024

 தவெக மாநாட்டிற்கு சென்ற தொண்டர்களின் கார் விபத்து

image

தவெக மாநாட்டிற்கு திருச்சியிலிருந்து வந்த தொண்டர்களின் கார் உளுந்தூர்பேட்டை அருகே சேக்உசேன்பேட்டையில் சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருந்த தடுப்பில் கார் மோதி 10அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்தின் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் பலத்த காயங்களுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News October 27, 2024

கள்ளக்குறிச்சியில் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று (அக்.27) தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்திருந்தார். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News October 26, 2024

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 26, 2024

19 துணை வட்டாட்சியர்கள் அதிரடி பணியிடை மாற்றம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 19 வருவாய் துறை துணை வட்டாட்சியர்களை அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி தேர்தல் துணை வட்டாட்சியர் அண்ணாமலை வாணாபுரம் வட்ட வழங்கல் அலுவலராகவும் என 19 துணை வட்டாட்சியர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!