Kallakurichi

News November 5, 2024

கள்ளக்குறிச்சியில் 367 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 355 கோரிக்கை மனுக்களும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 12 கோரிக்கை மனுக்களும் என மொத்தமாக 367 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 4, 2024

சங்கராபுரம் வட்ட வருவாய் ஆய்வாளர் பொறுப்பேற்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்ட வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய கல்யாணி என்பவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சிப் பணிக்கு சென்று விட்டார். இதையடுத்து இன்று சங்கராபுரம் வட்ட புதிய வருவாய் ஆய்வாளராக திவ்யா என்பவர் சற்றுமுன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு கிராம உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அரசு பணியாளர்கள் என ஏராளமான வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News November 4, 2024

கள்ளக்குறிச்சி: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணிகளில் சேர்வதற்கான போட்டி தேர்வில் பிறப்பிக்க ஆயத்த பயிற்சிக்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உரிய ஆவணங்களுடன் உதவி இயக்குனர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம் விழுப்புரம் நாளை மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 4, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட மழை பதிவு விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை அதிகபட்சமாக கோமுகி PWD 3மில்லி மீட்டரும் கச்சிராயபாளையம் 2.9 மிமீ கள்ளக்குறிச்சி 2 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

News November 4, 2024

மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்ட தேதி அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் கார்த்திகேயன் தலைமையில் மாதம் தோறும் செவ்வாய்கிழமைகளில் மின்வாரிய கோட்ட அலுவலகங்களில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி கோட்டத்தில் நாளை 5ம் தேதி, திருக்கோவிலூர் கோட்டத்தில் 12ம் தேதியும் நடக்கிறது. சங்கராபுரம் கோட்டத்தில் 19ம் தேதி, உளுந்துார்பேட்டை கோட்டத்தில் 26ம் தேதி  நடைபெறுகிறது என அறிவிப்பு 

News November 3, 2024

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (03.11.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 3, 2024

வடபொன்பரப்பி அருகே மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பி கால்நடை மருத்துவமனை அருகே உள்ள காப்பு காட்டில் இன்று காலை ராயசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (40) என்பவர் மர்மமான முறையில்  உயிரிழந்து கிடந்தது உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வடபொன்பரப்பி காவல்துறையினர் இறந்தவரின் உடலை கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

News November 3, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 226.10 மில்லி மீட்டர் மழை பதிவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 226.10 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது அதிகபட்சமாக மடப்பூண்டி 30 மில்லி மீட்டரும் மணலூர்பேட்டை 26 மிமீ ரிஷிவந்தியம் 12 மிமீ அரியலூர் 20 மிமீ‌ வாணாபுரம் 22 மிமீ என மழை பதிவாகியுள்ளது.  மேலும் கச்சிராயபாளையம் கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் சின்னசேலம் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.

News November 2, 2024

மழைக்காலத்தில் இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்

image

வெளியில் செல்வோர் கட்டாயம் குடை ரெயின்கோட், ஜர்கின் போன்றவற்றை கொண்டு செல்லுங்கள். மெழுகுவர்த்தி, டார்ச் போன்றவற்றை வாங்கி வைக்கவும். வயதானவர்கள், உடல்நலம் பாதிப்பு அடைந்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான மருந்துகளை வாங்கி வைக்கவும். மழை பெய்யும்போது, ஜன்னல் கதவுளை மூடி வையுங்கள். மின் பழுது பார்க்க வேண்டாம். ஈரமான கைகளுடன் ஸ்விட்ச் போடாதீர்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்கவும்.

News November 2, 2024

மின் வேலியில் சிக்கி பூ வியாபாரி பலி

image

உக்காந்தூர்பேட்டை அருகே கிளியூரில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி இன்று காலை பூ வியாபாரி சரத்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் பூ பறிக்க சென்றபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும், சட்ட விரோதமாக மின் வேலியயை அமைத்த கியானந்தன் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!