Kallakurichi

News November 7, 2024

கள்ளக்குறிச்சியில் பெட்ரோல் பங்க் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை 

image

கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் நேற்று காவல் ஆய்வாளர் ராபின்சன் தலைமையில் தனியார் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வாட்டர் கேனில் பெட்ரோல் வழங்கக் கூடாது என்றும், மீறி வழங்கினால் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News November 7, 2024

கள்ளக்குறிச்சி அருகே 7 பேர் மீது வழக்கு

image

கூத்தக்குடியை சேர்ந்தவர் பிரபு.இவரது மனைவி கவிதா.கடந்த ஒரு மாதமாக கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வருகின்றனர்.கடந்த 1ம் தேதி பிரபு புதுஉச்சிமேட்டிலுள்ள மனைவி கவிதா வீட்டின் வழியே சென்றார்.அப்போது கவிதா அவரது குடும்பத்தினர் தனசேகர்,ராமராஜ்,வாசு,தனலட்சுமி ஆகியோர் சேர்ந்து பிரபுவை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.புகாரின் பேரில் ஏழு பேர் மீதும் போலீசார்  வழக்குப்பதிவு செய்தனர்.

News November 6, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்( 6.11.2024 ) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News November 6, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் தலைமையில் இன்று  நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

News November 6, 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைகேட்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ரஜத்சதூர்வேதி அவர்கள் தலைமை தாங்குகின்றார். இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுக்களாக வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 6, 2024

ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் 

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள நியாய விலை கடை விற்பனையாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில் அதற்காக விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன் அறிவித்துள்ளார்.

News November 6, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் தகவல்

image

சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா மண்டபத்தில் நவ.9-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க https://forms.gle/9kSXaQGa6g6LMEdj6 என்ற வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 5, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (05.11.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 5, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகுதியில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் காங்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாவட்டத்தில் மட்டும் ஒன்பது ஊராட்சிகளிலும் 4,200 வீடுகள் கட்ட பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தகவல் கூறியுள்ளார்.

News November 5, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு

image

சேலத்தில் நவம்பர் 9-ம் தேதியன்று சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா மண்டபத்தில் நடைபெற உள்ள முகாமில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொள்ளவும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!