India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மார்ச் 6-ம் தேதி இரவு முதல் மார்ச் 7-ம் தேதி காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மார்ச் 6-ம் தேதி இரவு முதல் மார்ச் 7-ம் தேதி காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

இந்திலி தனியார் கல்லூரியில் அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (மார்ச்.6) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் கலந்து கொண்டனர்.

சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்வராயன்மலை வட்டம்,தொரடிப்பட்டு கிராமத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஆட்சியர் பிரசாந்த் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் த. உதயசூரியன் ஆகியோர் நாளை(மார்ச்.07) சனிக்கிழமை காலை 11 மணியளவில் வழங்க உள்ளனர்.

சோழ தேச பெருமையை நிலைநாட்டிய ராஜ ராஜா சோழனை பெற்ற பெருமை கொண்டது கள்ளக்குறிச்சி மாவட்டம். திருக்கோவிலூர் தான் சோழனின் தாயார் வானவன் மாதேவி பிறந்த ஊர். வானவன் மாதேவிக்கும் சுந்தர சோழனுக்கும் திருமணம் நடந்தது பற்றியும்,ராஜ ராஜ சோழன் இங்கு பிறந்தது பற்றியும் திருக்கோவிலூர் வீரட்டானேசுஸ்வரர் கோவில் கல்வெட்டு கூறுகிறது. சோழத்திற்கு பெருமை சேர்க்கும் நம்ம ஊரு பெருமையை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

கள்ளக்குறிச்சி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். *கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க*

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே க்ளிக் செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே<

கள்ளக்குறிச்சியில் உள்ள பல்வேறு வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் துறைகளில் பணியாற்றி வந்த 18 துணை வட்டாட்சியர்களை, நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் பிரசாந்த் நேற்று உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பணியிட மாற்றம் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர்கள் அனைவரும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய இடங்களில் உடனடியாகப் பணியில் சேர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ரிஷிவந்தியம் MLA வசந்தம் கார்த்திகேயன், இந்தத் தேர்தலில் வென்றால் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2011 தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், பிரேமலதா பார்வை ரிஷிவந்தியம் மீது விழுந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த அரசியல் கணக்கு, வசந்தம் கார்த்திகேயனின் அமைச்சர் கனவை முறியடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உங்க கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.