Kallakurichi

News November 25, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவு செய்து பயன்பெற வேண்டும் என்றும் உத்யம் பதிவிற்கான வழிகாட்டுதலை வழங்கவும் வட்டார நிலைகளிலும், பேரூராட்சி மற்றும் நகராட்சி மட்டத்திலும் எதிர்வரும் காலங்களில் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று அறிவித்துள்ளார்.

News November 24, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவு செய்து பயன்பெற வேண்டும் என்றும் உத்யம் பதிவிற்கான வழிகாட்டுதலை வழங்கவும் வட்டார நிலைகளிலும், பேரூராட்சி மற்றும் நகராட்சி மட்டத்திலும் எதிர்வரும் காலங்களில் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.

News November 24, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (24.11.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 24, 2024

மின்சாரம் தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுமன் என்பவரது 6 வயது மகன் நிவின் இன்று தனது வீட்டின் ஃபேன் ஸ்விட்சை போடும்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார். சிறுவனை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 24, 2024

சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்க

image

உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.

News November 24, 2024

சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

ATM மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது UPI மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். இந்த புகார்களில் மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும், Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

News November 24, 2024

கள்ளக்குறிச்சி அருகே நாளை மின்தடை

image

தியாகதுருகம் துணை மின் நிலையத்திலிருந்து மாதாந்திர பராமரிப்பு மேற்கொள்ள உள்ளதால் நாளை (25/11/2024) காலை 9 மணி முதல் 5:00 மணி வரை தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, எலவனாசூர்கோட்டை, நூரோலை, லாலாபேட்டை, பழையசிறுங்கூர், சூலாங்குறிச்சி, ரிஷிவந்தியம் மடம், வீரசோழபுரம், பிரதிவிமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது என செயற்பொறியாளர் சாமிநாதன் கூறியுள்ளார்.

News November 23, 2024

நிதி நிறுவனத்தில் 1,82,000 பணத்தை திருடிய நபர் கைது

image

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் உடன் பணியாற்றுபவர்களுக்கு மயக்க மாத்திரை கொடுத்து 1,82,000 பணத்தை திருடி சென்ற நபரை தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் கர்நாடக மாநிலத்திற்கு விரைந்து சென்று குற்றவாளி ரகுபதி ரெட்டியை கைப்பற்றி அவரிடம் இருந்த 1,60,000 பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News November 23, 2024

இரவு நேர ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (23.11.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 23, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறையினரை கண்டித்து வரும் திங்கட்கிழமை முதல் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் ஆகிய பகுதியில் உள்ள வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருப்பது என கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!