India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தாட்கோ திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்து தருவதாகவும், திட்டத்தில் பயன்பெற சிலர் இடைத்தரகர்களை ஆசை வார்த்தைகள் கூறி பயனாளிகளிடம் ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி ஈடுபடுவார்கள். ஆகையால் பொதுமக்கள் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் நேரடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தை அணுகவும் என்று அறிவுரை கூறியுள்ளார்.
பிரதான் மந்திரி கம் சடக் யோஜனாவின் தற்போதைய நிலை என்ன? கடந்தாண்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட மொத்த நிதித்தொகை எவ்வளவு? எதிர் காலத்தில் மேலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கத்திடம் இருக்கும் திட்டங்கள் என்ன என்பது குறித்து நேற்றைய தினம் மக்களவையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் கேள்வி எழுப்பினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள், அவர்களின் ஒப்புதலுடன் விருப்பமுள்ளவர்கள் முதல்வர் மருந்தகம் அமைக்கலாம் எனவும், இதற்காக www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் நேற்று வரை விண்ணப்பிக்கலாம் அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து பொதுமக்கள் நலன் கருதி வரும் டிசம்பர் 10 ஆம் தேதி வரை காலஅவகாசத்தை நீட்டித்து கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள்குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, விழுப்புரம் கடலூர், தி.மலை, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் சிறு வணிகர்களுக்கு சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம் நாளை முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை நடைபெறுவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிறு வணிகர்களுக்கு உதவிக்கரம் நீட்டவே இந்த முகாம் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தினந்தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. சின்னசேலம் கல்வராயன்மலை, தியாகதுருகம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் 27 இடங்களில் நாளை மருத்துவம் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் அறிவித்துள்ளார். பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறவும்.
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அதிமுக மற்றும் பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.சிபிஐ விசாரணை மேற்கொண்டால் காலதாமதம் ஆகும் எனவும் தமிழ்நாடு அரசு அதில் குறிப்பிட்டுள்ளது.
B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (டிச.5) கடைசி நாள் என்பதால், விருப்பமுள்ள தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மானியமாக ரூ.3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் புயல் மழையால் 410 வீடுகள் சேதமாகி உள்ளது. அவர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகை 2000 ரூபாய் சம்பந்தப்பட்ட துறை சார்பாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை தக்காளி ரூ.70, கத்திரிக்காய் ரூ.60, அவரைக்காய் ரூ.110, வெண்டை ரூ.40, கொத்தவரை ரூ.50, புடலங்காய் ரூ.50, பீர்க்கன் ரூ.70, முருங்கைக்காய் ரூ.100, முள்ளங்கி ரூ.50, இஞ்சி ரூ.80, சி.வெங்காயம் ரூ.70, உருளை ரூ.50, கேரட் ரூ.80, பீன்ஸ் ரூ.70, முட்டை கோஸ் ரூ.40, செளசெள ரூ.48, பீட்ரூட் ரூ.70 உள்ளிட்ட விலைகளுக்கு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.