India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 2 லட்சத்து 98 ஆயிரம் கால்நடைகள் உள்ளதாகவும், அந்த கால்நடைகளுக்கு வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது. இதில் இரண்டு லட்சத்து 98 ஆயிரம் கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்தார்.
சின்னசேலம் அருகே திம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த நிர்மலா நேற்று மாலை அருகில் உள்ள பால் நிலையத்தில் பால் கொடுத்துவிட்டு மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவருடைய வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள சோள தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதில் டிஎஸ்பி தேவராஜ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் நான்கு தனிப்படைகள் அமைக்க எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சவுதி அரேபியா அமைச்சகத்தில் அலோபதி மருத்துவம் படித்த முதுகலைப் பட்டம் பெற்ற மருத்துவர்கள், அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் வாயிலாக சவுதி அரேபியா அமைச்சகத்தில் மருத்துவர் பணியிடங்களுக்கு www.omcmanpower.tn.gov.in மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், 63791 79200 தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த பவர் ஆபீஸ் அருகில் இயங்கி வரும் பாரதி மெட்ரிக் பள்ளி பேருந்து இன்று பனையாந்தூர் அருகே கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. விபத்தில் பள்ளிக்குச் சென்ற ஏழு மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை தனியார் பள்ளிகளில் இயங்கக்கூடாது என்று சொல்லியும் வகுப்புகள் நடந்துள்ளது. இன்று காலை 8:30 மணி அளவில் விபத்து ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பு திட்டம் ஆறாவது சுற்று மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கால்நடை பராமரிப்பு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.இதற்கான உத்தரவை டிஜிபி சங்கர் ஜிவால் இன்று வெளியிட்டுள்ளார்.
இந்திய ஒன்றியத்தின் பிரதமராக பத்தாண்டு காலம் மிகச் சிறப்பாக பணியாற்றிய பொருளாதார அறிஞர் மன்மோகன்சிங் மறைந்தார் என்ற செய்தியை அறிந்து வருத்தம் அடைகின்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் பேரியக்கத்தின் தொண்டர்களுக்கும் திமுக தொண்டர்களில் ஒருவராக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன் என கள்ளக்குறிச்சி எம்.பி மலையரசன் வெளியிட்டுள்ள இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் எறையூர் கிராமத்தில் உள்ள பூண்டி மெயின் ரோடு அருகே இன்று அதிகாலை ஆனந்த் அமல்ராஜ் என்பவர் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (26.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் எதிரே அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை எதிர்த்தும், திமுக அரசை கண்டித்தும் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.