Kallakurichi

News January 7, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச வேட்டிகள் தினம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று சர்வதேச வேட்டிகள் தினம் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் கொண்டாடப்பட்டது. ஆண் அரசு ஊழியர்கள் அனைவரும் பாரம்பரியமான வேட்டி கட்டிக்கொண்டு பணியாற்றி மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். இதனைத் தொடர்ந்து அலுவலக நேரம் முடிவில் மாவட்ட ஆட்சியருடன் அனைத்து அரசு ஊழியர்களும், ஒன்றாக அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.

News January 7, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (6.1.2025 ) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள், மேலே உள்ள புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

News January 6, 2025

377 மனுக்கள் பெறப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பல்வேறு விதமான கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர். இதில் மொத்தமாக 377 மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News January 6, 2025

கள்ளச்சாராய வழக்கு; 18 பேர் குண்டாஸ் ரத்து

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதில், 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில், கைதான 18 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

News January 6, 2025

சின்னசேலம் அருகே ஆட்டோ மோதியதால் ஒருவர் உயிரிழப்பு

image

சின்னசேலம் அருகே உள்ள வரதப்பனூர் ரயில்வே கேட் அருகில் மது போதையில் நடந்து வந்தவர் மீது ஆட்டோ மோதியதால் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இது குறித்து சின்னசேலம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோ ஓட்டுநரின் கவனகுறைவால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர். மேலும் உயிரிழந்தவரை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 5, 2025

நாளை தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

பெண்களுக்கும் மாணவிகளுக்கும் எதிராக தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்தும் தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி மாவட்ட தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் ஜனவரி 6 ஆம் தேதி அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கருணாகரன் அறிவித்துள்ளார்.

News January 5, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ( 5.1.2025 ) இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள்குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது100-ஐ டயல் செய்யலாம்.

News January 5, 2025

பேரறிஞர் அண்ணா தொடர் ஓட்ட போட்டி

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பேரறிஞர் அண்ணா ஓட்ட போட்டியினை இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

News January 5, 2025

வெறிநாய் கடித்து 27 பேர் காயம்

image

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் தெரு நாய் ஒன்று மக்கள் சிலரை விரட்டி கடித்துள்ளது. இதனையடுத்து, மக்கள் ஒன்று கூடி தெரு நாயை விரட்டியடித்தனர். அதனையொட்டி, கோட்டைமேடு, மோரைபாதை, செக்குமேட்டு தெரு பகுதிக்கு சென்ற வெறிநாய் அவ்வழியாக சென்றவர்களை விரட்டி கடித்துள்ளது. இதில் கருணாபுரம், கோட்டைமேடு, மோரைபாதை சேர்ந்த 27 பேர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

News January 4, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!