Kallakurichi

News January 17, 2025

இரவு நேர ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 17, 2025

சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கிறார் அமைச்சர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஒன்றியம், வேங்கூர் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் திருக்கோவிலூர்-ஆசனூர் சாலை இருவழிப்பாதை நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் பணியினை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நாளை(18.01.2025) காலை 10:30 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 17, 2025

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுரு தலைமையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழகச் செயலாளர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பூர்வமான பணிகள் தொடர்பாக பல்வேறு விதமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

News January 17, 2025

கள்ளக்குறிச்சி பகுதியில் மின்தடை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை 18.1.2025 அன்று பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் கள்ளக்குறிச்சி, ஏமாப்பேர், நீலமங்கலம், க. அலம்பலம், சடையம்பட்டு, மட்டிகைகுறிச்சி, சோமண்டார்குடி, கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், ரோடுமாமாந்தூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என கள்ளக்குறிச்சி மின்துறை செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

News January 17, 2025

அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

image

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் இன்று தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108ஆவது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் விதமாக அவருடைய திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News January 17, 2025

செங்குறிச்சியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது

image

செங்குறிச்சியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன்பேரில், உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியபோது அதே கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டில் சோதனை செய்த போது, மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. பின் கணேசனை கைதுசெய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 17, 2025

கள்ளக்குறிச்சி, கச்சிராபாளையம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

image

கள்ளக்குறிச்சி மற்றும் எடுத்தவாய் நத்தம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.18) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கள்ளக்குறிச்சி மற்றும் எடுத்தவாய் நத்தம் சுற்றியுள்ள கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என கள்ளக்குறிச்சி மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் கணேசன் என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News January 16, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 16, 2025

மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக செயலாளருமான உதயசூரியன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அங்கையற்கண்ணி ஆகியோர் இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.

News January 16, 2025

ரிஷிவந்தியம் அருகே 3 பேர் கைது

image

தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகர், ஜெயமணி ஆகியோர் தலைமையிலான போலீசார் தியாகதுருகம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது பாட்டில் விற்பனை செய்ததாக ரிஷிவந்தியம் அருகே வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி , உதயமாம்பட்டு பகுதியைச் சேர்ந்த லட்சாதிபதி , வல்லரசு ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!