India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள். இன்ஜினியரிங் டிரைய்னி – ரூ.50,000 – ரூ.1,60,000, மேற்பார்வையாளர் டிரைய்னி ரூ.32,000 – ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். <
தமிழக அரசு ‘போதை பொருள் இல்லா தமிழ்நாடு’ எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மது மற்றும் போதை பொருட்கள் தொடர்பான புகாரை, 90800 34763 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலம் தெரிவிக்கலாம். இதேபோன்று மாநில அளவில் புகார் அளிப்பதற்காக, 10581 என்ற கட்டணம் இல்லா உதவி எண் செயல்பட்டு வருகிறது என்றும் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கூட்டத்தில் சுற்றுலாத் துறையின் சார்பில் சுற்றுலா மேம்பாட்டு வழிமுறைகள் குறித்து மாவட்ட சுற்றுலா வளர்ச்சி பொதுக்கூட்டம் ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் தலைமையில் நேற்று (7.2.2025 ) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டு குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மதுபான கடைகள் ஒட்டி உள்ள மது கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஹோட்டலில் உள்ள மது கூடங்கள் அனைத்தும் வருகின்ற செவ்வாய்க்கிழமை 11.2.2025 அன்று வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் மூட வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டு உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கூட்டத்தில் சுற்றுலாத் துறையின் சார்பில் சுற்றுலா மேம்பாட்டு வழிமுறைகள் குறித்து மாவட்ட சுற்றுலா வளர்ச்சி பொதுக்கூட்டம் ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் தலைமையில் நேற்று (7.2.2025 ) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டு குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (7.2.2025 ) இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் .
உளுந்தூர்பேட்டை அருகே ஒலையனூர் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்ததை, கிராம வாசிகள் மற்றும் விவசாயிகள் பார்த்து அதிர்ச்சியில், உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி, உயிரிழந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பையில் நடைபெற உள்ள இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் விமானம் மூலமாக மும்பைக்கு புறப்பட்டு சென்றனர்.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளம் ரூ.50,000 முதல் – ரூ.1,80,000 வரை வழங்கப்படும். வரும் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். SHARE IT
Sorry, no posts matched your criteria.