India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு இன்று (ஏப்ரல் 12) முதல் 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக <
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியின மீனவ பயனாளிகளுக்கு, 90 சதவீத அரசு மானியத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.பயனடைய விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், நெ.62/56ஏ, தாட்கோ அலுவலக வளாகம், அரசு மருத்துவமனை சாலை, விழுப்புரம்- 605 602 என்ற அலுவலகத்தில் நேரிலும், 04146 – 259329 என்ற தொலைபேசி எண்ணிலும் அழைக்கலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த வாழவந்தான் குப்பத்தை சேர்ந்தவர் சீதாராமன், விவசாயி. இவர் கடந்த, 10ஆம் தேதி இரவு தனது பைக்கில், வாழவந்தான்குப்பத்தில் இருந்து தியாகதுருகம் நோக்கி சென்றார். அப்போது அவருக்கு பின்னால் வந்த கார், திடீரென பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சீதாராமன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் விசாரிக்கின்றனர்.
▶மாவட்ட ஆட்சியர் – 04151-228802 ▶மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 9445005243 ▶மாவட்ட வருவாய் அலுவலர் – 9445000939 ▶காவல் கண்காணிப்பாளர் 9444463398 ▶ கள்ளக்குறிச்சி தாசில்தார் – 9445000519 ▶ கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் – 8098094226 ▶ இணை சுகாதார இயக்குநர் – 7358151918 முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
கள்ளக்குறிச்சி, தோப்பூரைச் சேர்ந்த விஜயகாந்த்,31. இவர் சோமண்டார்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்த மோகூர் பகுதியைச் சேர்ந்த, 15 வயது சிறுமியை கடந்தாண்டு திருமணம் செய்தார். இரு வீட்டாரும் இணைந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். தற்போது சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். சின்னசேலம் மகளிர் ஊர் நல அலுவலர் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வாலிபர் மற்றும் பெற்றோர் மீது வழக்குப்பதிவு.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க அல்லது திருத்தங்கள் செய்ய நாளை ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் தாலுகா அலுவலகங்களில் நடத்தப்படுகின்றன. ரேஷன் கார்டுடன் தொடர்புடைய எந்தவொரு கோரிக்கைகளையும் நீங்கள் தெரிவிக்கலாம். முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்றவற்றை இலவசமாகவே செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
கள்ளக்குறிச்சியில் 138 அங்கன்வாடி பணியாளர்கள், 14 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 133 அங்கன்வாடி உதவியாளர் உள்ளிட்ட 285 பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், விண்ணப்பிக்க ஏப்ரல் 23-ஆம் தேதி கடைசி நாள் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். இந்த பணிகளுக்கு விண்ணப்பங்களை இந்த லிங்கை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்
அக்னிவீர் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழிலும் தேர்வு எழுதலாம். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் <
சங்கராபுரம் அடுத்த வாணியந்தலை சேர்ந்தவர் அன்பரசன். மனைவி சத்யா(26) இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், 3 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுவந்தது. சத்யா தனது குழந்தைகளுடன், பானையங்காலில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், நேற்று பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு நாளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான கடைகளும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார். அரசு விதிமுறையை மீறி நாளை மதுபானங்கள் விற்றால் கடை உரிமையாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.