Kallakurichi

News January 1, 2026

கள்ளக்குறிச்சி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே<> க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 1, 2026

கள்ளக்குறிச்சி: ஆன்லைனில் VOTER ID பெற ஈஸி வழி!

image

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில், உங்களுடைய வாக்காளர் அட்டையை தொலைத்துவிட்டு நீங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறீர்களா? வாக்காளர் அட்டையை பெற நீங்கள் நேரில் சென்று அலைய வேண்டாம். இந்த <>லிங்கில்<<>> சென்று உங்களது EPIC எண்ணை பதிவிட்டு, உங்களது வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்து வைத்து கொள்ளுங்கள். <<18731256>>தொடர்ச்சி..<<>>

News January 1, 2026

EPIC எண்ணை தெரிந்து கொள்ள ஈஸி வழி!

image

1) இந்த<> லிங்க்கை<<>> கிளிக் செய்யவும். 2) இந்த லிங்கில் search by deatils அல்லது search by Mobile என்பதனை கிளிக் செய்து கொள்ளவும். 3) இதில் உங்களது மாநிலம் மற்றும் உங்களது மொழியை தேர்வு செய்யவும். 4) பின்னர் அங்குள்ள Captcha-வை பதிவு செய்யவும். 5) உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை பதிவிட்டால் உங்களது EPIC எண்ணை தெரிந்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News January 1, 2026

கள்ளக்குறிச்சியில் நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

image

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து மேலும் விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 1, 2026

 ‘ஸ்டார்ட் அப்’ கிராமங்களில் புத்தொழில் திட்டம் துவக்கம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ‘ஸ்டார்ட் அப்’ கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ள சாத்தனுார் மற்றும் நாரணம்பட்டிக்கு புத்தொழில் திட்டத்தை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். இத்திட்டம் பற்றிய கூடுதல் விபரங்களை https://gtp.startuptn.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வின் போது ‘ஸ்டார்ட் அப்’ திட்ட அலுவலர் செந்தமிழன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

News January 1, 2026

கள்ளக்குறிச்சி: வங்கி ஊழியர்கள் மீது புகார் அளிக்கணுமா?

image

கள்ளக்குறிச்சி மக்களே.. வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை <>இங்கு க்ளிக்<<>> செய்து ரிசர்வ் வங்கியில் புகாரளிக்கலாம் அல்லது மண்டல (044-25361910) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து விதமான வங்கிகளின் மீதும் புகாரளிக்கலாம். இந்த முக்கியமான தகவலை அனைவருக்கும் பகிருங்கள்!

News January 1, 2026

கள்ளக்குறிச்சி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News January 1, 2026

கள்ளக்குறிச்சியில் சட்டவிரோத மது விற்பனை அமோகம்!

image

கள்ளக்குறிச்சி: கச்சிராயப்பாளையம் அடுத்த மாதவச்சேரி, அம்மாபேட்டை பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபான பார் வைத்து நடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மாதவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், போலீசார் அந்த கிராமங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், மாதவச்சேரியைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் அம்மாபேட்டையைச் சேர்ந்த செல்வகுமார் ஆகியோரை சட்டவிரோத மதுபான பார் நடத்தியதற்காக கைது செய்தனர்.

News January 1, 2026

கள்ளக்குறிச்சி: நெல் அறுவடை இயந்திர ஓட்டுநர் பரிதாப பலி!

image

கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சம்பத்குமாா் (27). நெல் அறுவடை இயந்திரத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இவா் நேற்று, பம்புதோட்டம் -ரங்கநாதபுரம் சாலையில் சாலை விரிவாக்க பணிக்காக ஆலமரக் கிளையை வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மரத்தில் இருந்து தவறி விழுந்த சம்பத்குமாா் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 1, 2026

கள்ளக்குறிச்சி: கர்ப்பமடைந்த காதலி – மிரட்டிய காதலன்!

image

பவுஞ்சிப்பட்டைச் சேர்ந்த அய்யனாரும் (29), 26 வயது இளம்பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு, திருமணம் செய்ய மறுத்து அய்யானாா் வெளிநாடு சென்றுவிட்டார். பின்னா் வீடு திரும்பிய அய்யனாா், அந்த பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் அய்யனார், அவரது குடும்பத்தினர் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!