India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெற: https://edistricts.tn.gov.in/revenue/status.html
நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க: https://edistricts.tn.gov.in/socialwelfare/status.html
சான்றிதழ்களை சரிபார்க்க: https://edistricts.tn.gov.in/revenue/verifyCertificate.html
இ-சேவை: https://tnesevai.tn.gov.in/
குழந்தை பாதுகாப்பு திட்டம்: http://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/status.html
(SHARE IT)

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள வாழவந்தான்குப்பம் கிராமத்தில் வரும் ஜனவரி 5-ம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அந்த இடத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதிகளில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜன.3,4) நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ் ஐ ஆர் வரைவு பட்டியலில் உங்கள் பெயர் நீக்கப்பட்டு இருந்தாலும் அல்லது புதிதாக பெயர் சேர்க்க வேண்டும் என்றால் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

சின்னசேலம் வளர்ந்து வரும் நகரமாகும். அதனால் சேலம் மெயின் ரோட்டில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மேலும் பஸ் நிலைய பகுதியில் பேருந்துகள் குறுக்கும், நெடுக்காகவும் நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து தடை ஏற்படுகிறது. சேலம், வேப்பூர் புறவழி சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஆகையால் சின்னசேலத்தில் போக்குவரத்து காவல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மக்களே.. உங்களில் பலருக்கும் சொந்த வீடு என்பது கனவாக இருக்கும். ஆனால் அது எளிதான காரியமாக அமைவதில்லை. நீங்கள் வீடு கட்டுவதில் ஏற்படும் தடைகளை நீக்கும் ஆலயமாக திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் விளங்குகிறது. இந்த கோயிலுக்கு வந்து இங்குள்ள ஈசனை வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கு, வீடு கட்டுவது தொடர்பான தடைகள் நீங்கும் என நம்பப்படுகிறது. சொந்த வீடு கனவுள்ள நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில், இந்திலி தனியார், கல்லுாரி மாணவர்கள் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் சுரேந்திரன் வரவேற்றார்.மாணவர்கள், பேராசிரியர்கள் ரத்த தானம் வழங்கினர். 50 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. <
Sorry, no posts matched your criteria.