Kallakurichi

News June 22, 2024

கள்ளக்குறிச்சி: பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

image

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகளால் திக்குமுக்காடியுள்ளது கருணாபுரம் பகுதி. 50க்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய கள்ளச்சாராய விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது.

News June 21, 2024

ஆறுதல் கூறிய பாமக அன்புமணி ராமதாஸ்

image

கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூன் 21)நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவர்களிடம் மேலும் தீவிர சிகிச்சை அளிக்குமாறும் அறிவுறுத்தினார். உடன், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு ஆகியோர் இருந்தனர்.

News June 21, 2024

கள்ளக்குறிச்சி: பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு

image

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் இறந்தவர்கள் குடும்பத்தினர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

News June 21, 2024

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.5000!

image

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு 18 வயது வரை மாதம் ரூ.5,000 பராமரிப்பு தொகையாக வழங்கப்படும் என்றும், பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வருங்கால வைப்பு நிதியாக வைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

News June 21, 2024

சிகிச்சைக்கு வராதவர்களை அழைத்துவர ஏற்பாடு

image

கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்துவிட்டு சிகிச்சைபெற வராமல் வீட்டில் இருப்பவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்புலன்சுகளில் 40 பேர் கொண்ட மருத்துவக் குழு இப்பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல். கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 120க்கும் மேற்போட்டோர் சிகிச்சை பெற்ற நிலையில் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பை தடுக்கும் பொருட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News June 21, 2024

வட மாநிலத்தவரை சேர்ந்தவரும் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தவரின் ஒருவர் வட மாநிலத்தவர் என தெரியந்துள்ளது. உத்திரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பானி பூரி வியாபாரியான ஜித்தேந்தரும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்திப்பதாக தகவல். மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில் பல்வேறு கட்சி தலைவர்கள், பிரபலங்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்தும் அரசை சாடியும் வருகின்றனர்.

News June 21, 2024

விசாரணையை தொடங்கிய தனி நபர் ஆணையர்

image

கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் தனிநபர் ஆணையரான நீதியரசன் கோகுல்தாஸ் விசாரணையை தொடங்கியுள்ளார். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விவரங்களை கேட்டறிகிறார். கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

News June 21, 2024

கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம்: முக்கிய நபர் கைது

image

கள்ளச்சாராயம் உயிரிழப்பு விவகாரத்தில் முக்கிய நபரான மாதேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா, சின்னத்துரை ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில் மாதேஷ் தற்போது கைதாகியுள்ளார். தற்போது வரை கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக உள்ளது. 80க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

News June 21, 2024

3 சாராய வியாபாரிகளுக்கும் 15 நாள் நீதிமன்ற காவல்

image

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் அவரது தம்பி தாமோதரன் மற்றும் மனைவி விஜயா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் 3 பேரையும் இன்று சிபிசிஐடி போலீஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில்3 பேருக்கும் ஜூலை 5 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி ஸ்ரீ ராம் உத்தரவிட்டுள்ளார்.

News June 21, 2024

கள்ளக்குறிச்சியில் 27 பேர் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 27 பேர், சேலத்தில் 15 பேர், விழுப்புரத்தில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மர் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!