Kallakurichi

News April 29, 2024

2 கி.மீட்டருக்கு ட்ரோன் கேமரா பறக்க தடை

image

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில்,தேர்தலில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான வாசுதேவனூர் மகாபாரதி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த கல்லூரியை சுற்றி 2 கி.மீ தொலைவிற்கு ட்ரோன் கேமராக்கள், வீடியோ கேமராக்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

News April 29, 2024

குப்பை கூடமாக மாறிய ரயில்வே நிலையம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மேல் நாரியப்பனூர் கிராமத்தில் ரயில்வே நிலையம் உள்ளது. இந்த ரயில்வே நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ரயில்வே நிலையத்தை சுற்றி அதிக அளவு குப்பைகள் காணப்படுகின்றன. இதனால் ,ரயில்வே நிலையத்தின் தூய்மையானது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே இதை அகற்ற ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 29, 2024

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

image

சின்னசேலம் அடுத்த கனியாமூர் பஸ் நிறுத்தம் அருகே இன்று(ஏப்ரல்.29) சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற காரின் டயர் வெடித்ததில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு நபர்கள் கவலைக்கிடமான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில் இருவரும் மாமந்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

News April 29, 2024

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சமூக நீதி கருத்தரங்கம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மஹாலில் நேற்று எவிடன்ஸ் அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆணவ படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்ற கோரி நடைபெற்ற சமூக நீதி கருத்தரங்கில் எவிடன்ஸ் கதிர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News April 28, 2024

மாணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எம்எல்ஏ

image

கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் வினோத் என்பவர் வாகன விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கொங்கராயபாளையம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இன்று கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேரில் மாலை அணிவித்து தனது இறுதி மரியாதையை செலுத்தினார்.

News April 28, 2024

கள்ளக்குறிச்சி சிறுவனுக்கு அரசு மரியாதை 

image

கள்ளக்குறிச்சி வட்டம்,கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து வினோத்தின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.தமிழக அரசின் உத்தரவின்படி, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் லூர்துசாமி இன்று (28.04.2024) கொங்கராயபாளையம் கிராமத்தில் உள்ள சிறுவனது வீட்டிற்கு நேரில் சென்று, உடலுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

News April 28, 2024

கள்ளக்குறிச்சி:கஞ்சா விற்பனை;நண்பர்கள் கைது

image

கள்ளக்குறிச்சி நகராட்சி எமப்பேர் பகுதி முரளி(20) என்ற இளைஞர் தனது வீட்டு அருகில் தனது நண்பரான அருகில் உள்ள சின்ன சேலம் வட்டம் பாண்டியன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (27) என்பவரை உடன் வைத்துக்கொண்டு கஞ்சா வியாபாரம் செய்த போது போலீசார் இவர்கள் இருவரையும் பிடித்து இன்று கைது செய்தனர். பின்னர், 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News April 27, 2024

கள்ளக்குறிச்சி: தங்க மழை சிறுசேமிப்பு திட்டம் மோசடி 

image

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் சுஜாதா எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் தங்க மழை சிறுசேமிப்பு திட்டம் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை நடத்தி வந்த பன்னீர்செல்வம் இவரது மனைவி சுஜாதா ஆகிய இருவரும் ஏஜெண்டுகள் மூலமாக ரூ.50 லட்சத்துக்கு மேல் நிதி மோசடி செய்து ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் போலீசார் பன்னீர்செல்வத்தையும் அவரது மனைவி சுஜாதாவையும் இன்று கைது செய்தனர்.

News April 27, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று முதல் மே.1ஆம் தேதி வரை வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3-5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும். வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம். வெளியில் செல்லும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் குடை மற்றும் தண்ணீர் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 27, 2024

கள்ளக்குறிச்சி மேல்நாரியப்பனூர் தேவாலயம் சிறப்புகள்

image

சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனூரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் நூற்றாண்டைக் கடந்து நிற்கிறது. ஆண்டுதோறும் புனித அந்தோணியாரின் வாழ்க்கை மற்றும் பணியை போற்றும் வகையில் ஜூன் மாதத்தில் 9 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த தலத்தில் அனைத்து மதத்தினரும் வழிபடுவது சிறப்பான ஒன்றாகும்.

error: Content is protected !!