India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 96 % மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு கடுமையாக உழைத்த தலைமையாசிரியர், வகுப்பு ஆசிரியர் மற்றும் பாட ஆசிரியைகளை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவராஜ் தலைமையில் PTA நிர்வாகிகள் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த வெள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அனைத்து மாணவர்களும் 100% தேர்ச்சியும் முதல் மதிப்பெண் 540 எனவும், ஏ.குமாரமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் 100% தேர்ச்சி சதவீதம் எனவும், முதல் மதிப்பெண் 535 எனவும் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம் 91.06% சதவீதமும், இந்த ஆண்டு 92.91% சதவீதம் கடந்த ஆண்டு 30 வது இடத்தை பெற்றிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் முன்னேறி, தற்போது 29 வது இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடதகுந்தது
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 90.68 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 90.72% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 94.92 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு, வெயிலின் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் வெயிலின் தாக்கத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நிர்வாகம் அறிவித்துள்ளது.
விருகாவூர் மாரியம்மன் கோவில் அருகே 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரத்தின் அருகே வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகள் ஓய்வெடுப்பது வழக்கம் அந்த வகையில் நேற்றூ டிராவலர்ஸ் மற்றும் கார் என இரண்டு வாகனங்கள் ஆலமரம் அருகே நிறுத்திவிட்டு அங்குள்ள கட்டையில் வாகன ஓட்டையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர் திடீரென ஆலமரம் வேரோடு டிராவலர்ஸ் மற்றும் கார் மீது சாய்ந்து விபத்துக்குள்ளானது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகே கோடை காலத்தில் பொது மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நேற்று புதியதாக அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை இன்று உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, மோர் உள்ளிட்டவற்றை எம்.எல்.ஏ மணிகண்ணன் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள ஷேக்உசேன்பேட்டையில் இன்று சாகுல் அமீது என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர். இதுகுறித்து சாகுல் அமீது அளித்த புகாரின் பேரில் எடைக்கல் காவல் நிலையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், இன்று மாலை 6.30 மணி வரை திருப்பூர், சிவகங்கை, மதுரை மற்றும் திண்டுக்கலில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. அதே போல், கள்ளக்குறிச்சி, ராம்நாடு, கோவை, சேலம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டத்திலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தியார் தனது கட்சியின் கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளர் சங்கராபுரம் வட்டம் மஞ்சப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஓவியர் பாபு என்பவரை நியமனம் செய்துள்ளார் இதனை அடுத்து கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்தியிடம் சிறப்பாக பணியாற்றுவேன் என்று கூறி வாழ்த்து பெற்றார்.
Sorry, no posts matched your criteria.