Kallakurichi

News May 9, 2024

டிராக்டர் வழங்க கள்ளக்குறிச்சிக்கு நடிகர் லாரன்ஸ் வருகை

image

கள்ளக்குறிச்சி நல்லாத்தூர் கிராமத்தில் சேவையை கடவுள் மாற்றம் என்ற அறக்கட்டளை சார்பில் டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இதில் நடிகர் லாரன்ஸ் கலந்துகொண்டு டிராக்டரை வழங்க வருகை தந்துள்ளார். அப்பொழுது லாரன்ஸ் பார்க்க இளைஞர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் என அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்

News May 9, 2024

கள்ளக்குறிச்சி அருகே இருவர் கைது 

image

தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் சரண்யாவிற்கு சொந்தமான காட்டுகொட்டகையை சேர்ந்த இளையராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் நான்கு பேர் சேதப்படுத்தி சரண்யா மற்றும் அவரது தாயை தாக்கியதாக கூறப்படுகிறது.புகாரின் பேரில் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து அதில் இளையராஜா, கண்ணன் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.

News May 8, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

image

ஜூன் 4 ஆம் தேதி கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், அனைத்து வேட்பாளர்கள், முகவர்கள் கூட்டம் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ஷ்ரவன்குமார், வாக்கு எண்ணிக்கை அமைதியாகநடைபெற வேட்பாளர்கள், வேட்பாளரின் முகவர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

News May 8, 2024

தீ விபத்தில் கருவேல மரங்கள் எரிந்து சேதம்

image

உளுந்தூர்பேட்டை அருகே உளுந்தாண்டார் கோவில் பகுதியில் வசித்து வருபவர் குணசேகரன் 40. விவசாயி இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் கருவேலமுள் மரங்கள் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மளமளவென எறிய தொடங்கியது. இதுகுறித்து அங்கு தகவல் அறிந்து வந்த மங்கலம் பேட்டை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீனை கட்டுக்குள் கொண்டு வந்து அனைத்தனர்.

News May 8, 2024

கள்ளக்குறிச்சி: 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி கள்ளக்குறிச்சி உட்பட 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 8, 2024

அரசு பேருந்து மோதி தொழிலாளி இறப்பு

image

சங்கராபுரம் அடுத்த மஞ்சபுத்துார் கிராமத்தைச் சேர்ந்த சேவி(50) சங்கராபுரம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று (மே 7) டி.வி.எஸ்., மொபட்டில் சென்றார். பூட்டை அருகே சென்றபோது எதிரே வந்த அரசு டவுன் பஸ் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சேவி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News May 7, 2024

கள்ளக்குறிச்சி கோமுகி அணை சிறப்புகள்!

image

1963இல் அன்றைய முதல்வர் காமராஜர் காலத்தில் கட்டும் பணி துவங்கப்பட்ட கோமுகி அணை, 1965 ஆம் ஆண்டு பக்தவத்சலம் காலத்தில் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்தது. கல்வராயன் மலைப் பகுதியில் பெய்யும் மழைநீர் முழுவதும் கல்படை, பொட்டியம், மல்லிகைப்பாடி, பரங்கிநத்தம் ஆகிய ஆறுகளின் வழியாக இந்த அணைக்கு வருகிறது. 60 ஹெக்டர் நீர்ப்பரப்பு கொண்ட இந்த அணை மூலம் 50-க்கும் மேற்பட்ட கிராம விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

News May 7, 2024

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் கைது

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மலையம்மன் கோயில் பின்புறம் இன்று இரு சக்கர வாகனத்தில் கஞ்சா வைத்துக் கொண்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த வி.புதூர் கிராமத்தைச் சேர்ந்த மூவேந்திரன் என்பவரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய சித்தலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவேந்திரன் இடமிருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News May 6, 2024

கள்ளக்குறிச்சி: மக்கள் வெளியே வருவதை தவிர்க்கவும்

image

கள்ளக்குறிச்சியில் கடந்த சில நாட்களாகவே 100 டிகிரிக்கு மேல் வெப்ப நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வீடுகளில் இருந்து வெளியே செல்ல வேண்டாம் என்றும், அவ்வாறு அத்தியாவசிய தேவை இருந்தால் குடிநீர் குடை பருத்தி ஆடைகளை அணிந்து வெளியே செல்ல வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News May 6, 2024

அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலரும், அரசு தலைமை கூடுதல் செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையில் கோடை வெப்பத்திலிருந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பது குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷரவன் குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!