India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 உதவி ஆய்வாளர்கள் உட்பட 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் உள்கோட்டத்தில் பணியாற்றிய போலீசார் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மதுவிலக்கு அமலாக்கப் பரிவிற்கு புதிதாக 34 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் நேற்று சின்னசேலம் நண்பர்கள் குழு மற்றும் மகாபாரதி இன்ஜினியரிங் கல்லூரி சார்பில் 29 ஆவது, தென்னிந்திய அளவிலான கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஆண்கள் அணி பிரிவில் சின்னசேலம் அணி முதலிடம் பிடித்தது. பெண்கள் பிரிவில் சின்னசேலம் அணி இரண்டாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு மகாபாரதி கல்லூரி தாளாளர் பரிசுகளை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய வழக்கில் 21 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 11 நபர்களை சிபிசிஐடி விசாரித்த நிலையில் தேவிகன், அரிமுத்து, அய்யாசாமி ஆகியோரின் காவல் நேற்றுடன் முடிந்தது. இதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் இந்த 3 பேரையும் நேற்று குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் இந்த 3 பேருக்கும் 20 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் 518 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 71 மனுக்களும் என மொத்தம் 589 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மர்பினர் நலத்துறையின் கீழ் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற வங்கி கணக்குடன் ஆதார், பேன் கார்டு இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் பெற்றோர் உடனடியாக இந்த பணியை மேற்கொள்ளவேண்டும் என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறையின் கீழ் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற வங்கி கணக்குடன் ஆதார், பேன் கார்டு இணைப்பு கட்டயமாக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் பெற்றோர் உடனடியாக இந்த பணியை மேற்கொள்ளவேண்டும் என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களை செம்மைப்படுத்தவும், மண்பாண்டம் செய்யும் பயன்பாட்டிற்காகவும் தங்கள் கிராமத்தில் உள்ள ஏரிகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம் என ஆட்சியர் பிரசாந்த் இன்று (ஜூலை 6) தெரிவித்துள்ளார். இதற்காக https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் விரிவாக்க மையங்களில், புதிய மின்னணு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பணமில்லா பரிவர்த்தனை செயல்படுத்தப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொள்ளும்படி வேளாண் துறை சார்பில்(ஜூலை 5) வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சொந்த கட்டிடங்கள் இயங்கும் கிறிஸ்தவ தேவ ஆலயங்களை பழுதுபார்க்க புனரமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி 10 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை உள்ள ஆலயத்திற்கு ரூ.10 லட்சமும் 15 ஆண்டு முதல் 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆலயங்களுக்கு ரூ.15 லட்சமும் வழங்கப்படும். நிதி தேவைப்படுவோர் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
வாணாபுரம் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் வரும் ஜூலை 11ஆம் தேதி மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், இதில் அரியலூர், ஏந்தல், பெரியபகண்டை, வாணாபுரம், அவிரியூர், அத்தியூர், பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மனு அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று (ஜூலை 5) தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.