India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரப் பகுதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வாசகங்கள் உள்ளடக்கிய துண்டு பிரசுரங்களை கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். குறிப்பாக வாகனங்களுக்கு அனைத்து ஆவணங்களும் வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டும் நபர்களை பாராட்டினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதியில் அமைந்துள்ளது பக்தஜனேஸ்வரர் கோயில். கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோயிலில் மூலவராக பக்தஜனேசுவரர் உள்ளார். இந்த ஆலயத்தில் வைத்து தேவியை, சிவபெருமான் மணமுடித்ததாக நம்பப்படுவதால், இங்கு செவ்வாய், வெள்ளி தோறும் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் வந்து திரிசனம் செய்பவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி: இந்திலியில் உள்ள தனியார் கல்லூரில் வரும் (ஜன.10)ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அரசு சார்பில் நடத்தப்படும் இந்த முகாமில், 8ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், முகாமில் பங்கேற்பவர்கள் சுயக்குறிப்பு, ஆதார் அட்டை, புகைப்படம் மற்றும் கல்விச் சான்றிதழ்களை கொண்டுவருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே…, SBI வங்கியில் காலியாக உள்ள 55 சிறப்பு அலுவலர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜன.10ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., வருகிற ஜன.11ஆம் தேதி நமது மாவட்டத்திற்கு கனமழை பெய்யக் கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மஞ்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், பொதுமக்கள் கவனமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தினந்தோறும் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் செங்கல்பட்டு மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இருவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு அவர்களை மீட்டு சம்பவம் பெரிதாக மாறாமல் தடுத்தனர். தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., இந்த 2026-யில் வேலையில் முன்னேற முனைபவரா நீங்கள்? உங்கள் துறையிலோ அல்லது வியாபாரத்திலோ முன்னேற்றம் அடைய வருங்காலத்தில் AI தொழில்நுட்பம் அவசியம். அந்த வகையில் அரசு சார்பாக நமது மாவட்டத்திலேயே இலவச AI பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.