India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசு, காவல்துறையின் அலட்சியப் போக்கு காரணமாகவே கள்ளக்குறிச்சியில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இணையதளத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளார். மேலும், கள்ளச்சாராய உயிரிழப்புகள் வேதனை மற்றும் அதிர்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கபட்டு இதுவரை 37 பேர் இறந்துள்ளனர்.
கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும், ஆட்சி அதிகாரம் மட்டுமே முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியம்; மக்கள் மீது அக்கறை இல்லை என்று தெரிவித்த அவர், இறந்தவர்கள் அடித்தட்டு மக்கள் என கூறினார். இந்நிலையில், கள்ளச்சாராயம் எதிரொலி காரணமாக இணையத்தில் #Resign_Stalin டிரெண்டாகி வருகிறது.
கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில், பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் கல்விச்செலவை அதிமுக ஏற்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அக்குழந்தைகளின் குடும்பங்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இன்று(ஜூன் 20) கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 37 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது மனைவி வடிவு ஆகிய இருவரும் கள்ளச்சாராயம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம்(ஜூன் 18) துக்க நிகழ்வில் பங்கேற்ற 200 பேர் கள்ளச்சாராயம் குடித்த நிலையில், 127 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 37 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 90க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளகுறிச்சி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இபிஎஸ், அதிகாரிகளும் அரசு நிர்வாகமும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை. மேலும் காவல் நிலையத்திற்கு பின்புறமே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டினார். மிகப்பெரிய கும்பல் இதற்கு பின்னால் இருப்பதாக கூறிய இபிஎஸ், அதிமுக எம்எல்ஏ புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதுவரை 37 உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற கோகுல்தாஸ் தலைமையில் தனிநபர் விசாரணை அமைத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 33 பேர் உயிரிழந்திருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 37 ஆகியுள்ளது. தொடர் மரணத்தால் கருணாபுரம் பகுதியே துக்கத்தில் மூழ்கியுள்ளது. மேலும் கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 70க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளச்சாராய வணிகத்திற்கு துணை போன அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசும், காவல் துறையும் முற்றிலுமாக தோல்வி அடைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.