India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மத்திய/மாநில அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்து உரிய சான்று பெற்று, இலவச தையல் இயந்திரம் பெறாத முன்னாள் படைவீரர்களின் மனைவிகள் கைம்பெண்கள், திருமணமாகாத மகள்கள் உரிய சான்றுகளுடன் விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகி, தங்களது பெயரினை பதிவு செய்து தையல் இயந்திரம் பெறலாம் என ஆட்சியர் பிரசாந்த் இன்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கடந்த மாதம் துளிர் திறனறிதல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசு மகளிர் பள்ளி பிளஸ் டூ மாணவி இ.சுபஸ்ரீ, மாநில அளவில் தேர்வாகி சாதனை படைத்துள்ளார். இவரை பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். சாந்தி மற்றும் அறிவியல் இயக்கத்தலைவர் ஜி.ஜானகிராமன் ஆகியோர் இன்று பாராட்டினர். மேலும் இந்த மாணவி மாநில அளவில் கல்வி சுற்றுலாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் ஆன்லைன் நிலுவை மற்றும் மக்கள் முடிந்த வருவாய் துறை பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
கல்வராயன் மலை பகுதியில் முதல்வர் அல்லது உதயநிதி சென்று பார்வையிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வராயன் மலைப் பகுதி மக்கள் மேம்பாடு குறித்து தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணை செய்து வருகிறது. அமைச்சர்கள் சென்றால் அதிகாரிகள் நடவடிகை எடுப்பர்கள் என்ற நீதிபதிகள், கல்வராயன் மலைப்பகுதிகளில் சாலை வசதி, ரேஷன் கடைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
BC,MBC,மைனரிட்டி, சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் பொருளாதார முன்னேற்றத்திற்காக லோன் மேளா வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் காலை 10.30 மணி முதல் 01.00 மணி வரை கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்திலும், ஆகஸ்ட் 2ஆம் தேதி 2024 உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், ஆகஸ்ட 9 ஆம் தேதி திருக்கோவிலூரில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில டேக்வாண்டோ போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளை நேற்று மாலை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும், தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற மாணவர், மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், வாழ்த்து தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து உதவித்தொகை பெற விண்ணபிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில், இந்த மாதம் தொடங்கும் காலாண்டிற்கான படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பங்கள் பெறப்படும் என மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நம் பள்ளி, நம் பெருமை என்ற திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 2ஆம் தேதி பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடக்கிறது. இந்த அறிமுகக் கூட்டத்தில் பெற்றோர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் பங்கேற்று நம் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு உறுதுணை புரிய வேண்டும் என ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் அய்யாவு என்பவர் தனது வீட்டிற்கு பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பத்தை ஆய்வு மேற்கொள்ள வட்டாட்சியர் கமலக்கண்ணன் மற்றும் டிஆர்ஓ சத்தியநாராயணன் அவர்கள் விஏஓ அலுவலர்களுடன் பட்டா குறித்து குடியிருப்புக்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்கள்.
கச்சராபாளையம் அருகே உள்ள எளியத்தூர் கிராமத்தில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம் நிகழ்ச்சியை நடைபெற உள்ளது. முகாமில் எளியத்தூர் பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மனுக்களாக கொடுக்கலாம். மேலும் வீடு இல்லாதவர்கள் வீட்டு மனை பட்டா கேட்டு பட்டா மாற்றம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை கேட்டு முகாமுக்கு வந்து மனுவாக கொடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.