Kallakurichi

News July 17, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 17, 2024

17 காவலர்கள் பணியிடை மாற்றம்

image

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 17 காவலர்களை வேலூர் சரகத்திற்கு பணியிடை மாற்றம் செய்து வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் இன்று உத்தரவிட்டுள்ளார். 17 காவலர்களை வேலூர் சரகத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News July 17, 2024

2,768 ஆசிரியர் பணி: வரும் 21ஆம் தேதி தேர்வு

image

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <>ஆன்லைனில்<<>> வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News July 17, 2024

இலவச ஆன்மிக சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 17, 2024

கள்ளக்குறிச்சி:7 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

image

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு 67 பேர் உயிரிழந்தனர்.இந்த விவகாரத்தில் அப்போதைய எஸ்பி உட்பட 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இந்நிலையில் விஷ சாராயத்தை கண்காணிக்க தவறியதற்கும்,நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கும் கள்ளக்குறிச்சி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் உள்ளிட்ட 7 பேர் காத்திருப்போர் பட்டியளலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத்சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார்.

News July 17, 2024

ஆற்றங்கரை அருகே 2 சிலைகள் கண்டெடுப்பு

image

எஸ்.வி பாளையம் ஆற்றங்கரையின் அருகில் இன்று இரண்டு கல்லால் ஆன ராகு மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டு அடி உயர சிலைகள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த சிலைகள் கிராம நிர்வாக அலுவலர் பர்கத்துன்னிசா என்பவரால் கைப்பற்றப்பட்டு சிலைக்கு யாரும் உரிமை கோராத நிலையில் தொடர்ந்து அந்த இரண்டு சிலைகளும் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.

News July 16, 2024

இரவில் பொதுமக்கள் சாலை மறியல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், நிறைமதி கிராமத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், அந்த பகுதியில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறி வேகத்தடை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தற்போது திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News July 16, 2024

நகர்ப்புற வளர்ச்சி துறை இணைச் செயலாளராக நியமனம்

image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் 67 பேர் உயிரிழந்தனர். இச்சம்வம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அப்போது மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ஷ்ரவன்குமார் ஜாடாவத் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், தற்போது அவரை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை இணைச் செயலாளராக நியமித்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

News July 16, 2024

உ.பேட்டையில் புதிய பேருந்து நிலையம்: ஆட்சியர் ஆய்வு

image

உளுந்தூர்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் குறித்து இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் ஆகியோர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே உளுந்தூர்பேட்டையில் பேருந்து நிலையம் அமைக்க அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

News July 16, 2024

குட்கா விற்றவர் கைது

image

பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பகண்டை கூட்ரோட்டில் பெட்டிக்கடை வைத்துள்ள அரியலூரைச் சேர்ந்த பிரகாஷ், குட்கா விற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, 855 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!