India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஜூலை 26 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் நடைபெற உள்ளது என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள இளைஞர்கள் முகாமில் பங்கேற்று பயனடையுமாறு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், நீலமங்கலம், கருனாபுரம், சடையம்பட்டு, சோமண்டார்குடி, நத்தமேடு, அக்கரைபாளையம், நல்லாத்தூர் என கள்ளக்குறிச்சி சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என துணை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை என தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இது தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, பாமக வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட பலர் தனித்தனியாக பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் குறிப்பிட்ட 5 வழக்குகலையும் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள ஆரியநத்தம், பாதூர், மடப்பட்டு, பெரும்பாக்கம், மட்டிகை, உளுந்தூர், உ. கீரனூர், மேப்புலியூர், செம்மனந்தல், காம்பட்டு உள்ளிட்ட 14 கிராம நிர்வாக அலுவலர்களை பணியிடை மாற்றம் செய்து திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் இதுவரை 67 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவ உயிரிழப்புகள் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் பாமக வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை வரும் ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் கூடுதல் கட்டிடத்தில் நாளை (ஜூலை 19) தனியார் துறை சார்பில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாமினை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் 47-ஆம் ஆண்டு கபிலர் விழா நாளை(ஜூலை19) காலை 8.30 மணிக்கு தொடங்கவுள்ளது. திருக்கோவிலூர் பண்பாட்டு கழகம் சார்பில், திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீ சுப்ரமணிய திருமண மகாலில் நடக்கவுள்ள இவ்விழாவில், ‘மூவர் மொழி வாசல்’ மற்றும் ‘ஒரு சொல், ஒரு இல், ஒரு வில்’ என்ற தலைப்புகளில் பேராசிரியர்கள் பேசுகின்றனர். இதில் மாலை 6 மணிக்கு அமைச்சர் பொன்முடி பங்கேற்று பேசவுள்ளார்.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.