Kallakurichi

News August 3, 2024

கள்ளக்குறிச்சி பழங்குடியின இளைஞர்களுக்கு அறிவிப்பு

image

தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தகுதி தேர்வில் பங்கேற்கவுள்ள பழங்குடியின இளைஞர்களுக்கு வரும் 10-ஆம் தேதி இணைய வழியில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.இந்த பயிற்சியில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்கலாம்.

News August 3, 2024

கள்ளக்குறிச்சியில் 124 நபர்களிடம் விசாரணை

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் இதுவரை கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 124 நபர்களிடம் நேற்றைய தினம் வரை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News August 3, 2024

கர்ப்பிணி சிறுமி தற்கொலை; கணவர் மீது ‘போக்சோ’

image

ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையாரைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (24). கரும்பு கூலித் தொழிலாளியான இவர், 16 வயது சிறுமியை காதலித்து கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். சிறுமி தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ரிஷிவந்தியம் போலீசார், விசாரணை நடத்தி அவரை ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர்.

News August 3, 2024

50% மானியத்தில் நாட்டு கோழிக் குஞ்சுகள்: ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணவனை, இழந்த ஏழ்மை நிலையில் உள்ள மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு, நாட்டு கோழிக் குஞ்சுகள் 50% மானியத்தின் கீழ் வழங்கப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை வரும் 23ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்ககுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பெண்கள் நம்பிக்கையை தளரவிடாமல், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News August 2, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு

image

ஆகஸ்ட் 6 ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் சீர்ப்பனந்தல், விளந்தை, திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் சேந்தமங்கலம், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் திருப்பெயர், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் சோமண்டார்குடி ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 2, 2024

கல்வராயன் மக்களுக்கான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

image

கல்வராயன் மலை பகுதி மக்களுக்கான வசதிகள் குறித்த ஆய்வை முடித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

News August 2, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அவர்கள் மீது ஓராண்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News August 2, 2024

தேசிய போட்டிக்கு தேர்வான கள்ளக்குறிச்சி மாணவி

image

அண்ணா நகரைச் சேர்ந்த நட்சத்திரா (14), கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், டேக்வாண்டோ பயிற்சி பெற்று வந்தார். தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வானார். வெற்றி பெற்ற மாணவிக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. அத்துடன் விசாகப்பட்டினத்தில் நடக்கும் போட்டியில் பங்கேற்பதற்கான பயண செலவினை தனியார் அறக்கட்டளை நேற்று வழங்கியது.

News August 2, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக டி என் பி எஸ் சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கு இலவச முழு மாதிரி தேர்வுகள் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி காலை 10 மணி முதல் வார நாட்களில் தொடர்ந்து டேனிஷ் மிஷன் துவக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.

News August 2, 2024

கள்ளக்குறிச்சி எஸ்.பி. சஸ்பெண்ட் ரத்து

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சமய்சிங் மீனாவுக்கு, புதிய பணி வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய இவர், கடந்த ஜூலை 19ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, தாம்பரம் போக்குவரத்து காவல் துணை ஆணையராக பணியமர்த்தப்பட்டுள்ளார். இதற்கு, உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!