India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுநலன் சார்ந்த 446 மனுக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் அளித்த 36 மனுக்கள் என மொத்தமாக 485 மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செப்டம்பர் 23ஆம் தேதி அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பசுமை சாதனையாளர் 2023க்கான விருது மற்றும் காசோலைணை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பசுமை சாதனையாளர் விருது பெற்ற சாமிதுரை மற்றும் அய்யனார் ஆகியோருக்கு வழங்கினார்.
கள்ளக்குறிச்சி, விஷச்சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் சடையன், வேலு, கெளதம் ஆகிய 3 பேரின் ஜாமின் மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய 17 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், சம்பவம் தொடர்பான சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் முழுவீச்சில் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அடுத்த குமாரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்(35). தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை, போலியாக பத்திரப்பதிவு செய்ததாக கள்ளக்குறிச்சி நில அபகரிப்பு பிரிவில் புகார் அளித்தார். அதன்படி, சார்பதிவாளர் மணிராஜ், ஆவண எழுத்தர்கள் உள்ளிட்ட 10 பேர் மீது 6 பிரிவுகளில் நேற்று (செப்.22) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (22.09.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல்நாரியப்பனூரை சேர்ந்த அம்மணி அம்மாள் ஆத்தூரில் அரசு மருத்துவமனையில் பிறந்துள்ள தனது பேத்தியை பார்ப்பதற்காக வி.கூட்ரோடு பகுதியில் பாலத்தின் கீழ் பேருந்து ஏறுவதற்காக இன்று நடந்து செல்லும் போது சேலத்தில் இருந்து சிதம்பரம் சென்ற அரசு பேருந்து திரும்பும் போது அம்மணி அம்மாள் மீது ஏறி இறங்கி நிற்காமல் சென்றுள்ளது. இதில் அம்மணி அம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 2024-ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் அரசு ஊழியர்களுக்கான பிரிவில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் மாவட்ட காவல்துறை சார்பில், வாலிபால் ஆண்கள் பிரிவில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற காவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி சந்தித்து வாழ்த்தினார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் சோத்தூர் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக சப் இன்ஸ்பெக்டர் பிரதாப் ரகசிய தகவல் கிடைத்தது அதன் பெயரில் அவர் சோத்தூர் கிராமத்தில் சென்று சோதனை செய்த போது அங்கு தங்கவேல் என்பவர் வீட்டின் பின்புறத்தில் 15 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது இதையடுத்து 15 லிட்டர் சாராயத்தை சம்பவ இடத்திலே கொட்டி அழித்தனர் தங்கவேல் கைது செய்தனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பை காண அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான வாலிபால் மற்றும் கபடி போட்டி நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
Sorry, no posts matched your criteria.