Kallakurichi

News August 1, 2024

கள்ளக்குறிச்சிக்கு கண்காணிப்பு அலுவலர் நியமனம்

image

11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சிக்கு தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை கண்காணிக்கவும், இயற்கை பேரிடர் காலங்களில் ஆட்சியர்களுடன் இணைந்து பணியாற்றவும் இந்த கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News August 1, 2024

‘SEED’ திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

image

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ‘SEED’ (Scheme for Economic Empowerment DNT’S) திட்டம், மைய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ளவர்கள், மைய அரசின் இணையதளமான www.dwbdnc.dosje.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News August 1, 2024

சீர்மரபினர் நல வாரிய உறுப்பினராக சேரலாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதேபோல், உறுப்பினராக பதிவு செய்தவர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை விரைவில் புதுப்பித்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் பிரசாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

News July 31, 2024

காங்கிரஸ் மாநில தலைவர் வருகை

image

சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் மகாலில் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 31, 2024

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News July 31, 2024

2 பேர் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவு

image

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி விசிக துணை அமைப்பாளர் பொன்னுசாமி (எ) தமிழ்பொன்னி, மாவட்ட மகளிர் விடுதலை இயக்கத் துணை அமைப்பாளர் பவளக்கொடி ஆகிய இருவரும் தொடர்ந்து கட்சிக்கு எதிராக செயல்பட்டு முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வந்தனர். இவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இருவரையும் கட்சியிலிருந்து நீக்கி மாவட்ட செயலாளர் மதியழகன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

News July 31, 2024

பட்ஜெட் நகல் எரிக்கும் போராட்டம்

image

தியாகதுருகம் பேருந்து நிலையப் பகுதியில் மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து மத்திய பட்ஜெட் நகல் எரிக்கும் போராட்டம் இன்று ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News July 31, 2024

நன்றி தெரிவித்த அதிமுக மாவட்ட செயலாளர்

image

கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுரு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்று தனது பிறந்த நாளை முன்னிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

News July 31, 2024

தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம் துவக்கம்

image

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் குழந்தைகள் நல பிரிவில் இயங்கும் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இது மத்திய அரசின் ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்திய காரியக்ரம் திட்டத்தின் மூலம் துவங்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பிறவியிலேயே காது கேளாதவர்கள், கண்பார்வை குறைபாடு சிகிச்சைக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை கல்லூரி முதல்வர் நேரு துவங்கி வைத்தார். 

News July 31, 2024

வேளாண் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

image

கள்ளக்குறிச்சி வேளாண்மைத்துறையின் மூலம் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வேலை இல்லாத இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் துவங்குவதற்காக இருவருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படும் என வேளாண் துறை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!