India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி வாணியந்தல், மடப்பட்டு, பாவந்தூர், பின்னல்வாடி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளதாகவும் இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு துறை சார்ந்த அதிகாரிகளிடம் தங்களுடைய மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு
முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு
வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும்
ஒரு வாய்ப்பாக 01.08.2024 முதல் 31.01.2025 வரை 6 மாத காலம் கால நீட்டிப்பு
செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்
கள்ளக்குறிச்சி மலையிடப்பகுதியில் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் விற்கப்பட்ட, விற்கப்படாத அனைத்து மனைகள், மனைப்பிரிவுகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை வரன்முறைப்படுத்த 30.11.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ஆக 16ஆம் தேதி சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ஏ.எல்.சி., சர்ச் வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. இதில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி சங்கராபுரம் திருக்கோவிலூர் ஆகிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நீதிமன்ற அன்றாட அலுவலகப் பணிகளை ஆய்வு செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சௌந்தர் ஆகியோர் இப்பணிகளை மேற்கொண்டனர். இதில், சங்கராபுரம் நீதிமன்ற நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசித்து வரும் பொதுமக்கள் மாவட்டத்தில் நடைபெறும் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்களுக்கு DSP- 99948 98628, INS – 94981 68555, office – 04251 294600 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என்றும், மேலும் dspkkidvac.tnpol@gov.in என்ற இமெயிலிலும் புகார் தெரிவிக்கலாம் என லஞ்ச, ஊழல் தடுப்புத் துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி காவல் மாவட்ட தலைமையக கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எஸ். குத்தாலிங்கம் கண்காணிப்பாளராக பணி உயர்வு பெற்று, சென்னை மாநகர காவல் ஆணையரகத்தின், டி. நகர் காவல் துணை காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சி வரை அமைக்கப்பட்டு வரும் இரயில்வே வழித்தட பணிகளை விரைந்து முடிக்க கோரியும், கள்ளக்குறிச்சி முதல் திருவண்ணாமலை வரை புதிய இரயில் பாதை அமைக்க வேண்டியும் கள்ளக்குறிச்சி எம்பி மலையரசன் ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் அளித்தார்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில கூட்டத்தை கள்ளக்குறிச்சியில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் நாளை நடைபெறும் கூட்டத்தில் 400 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டுமென நிபந்தனை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.