Kallakurichi

News February 1, 2026

கள்ளக்குறிச்சி: தாய்மார்களுக்கு ரூ.11,000!

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 1515-ஐ அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.

News February 1, 2026

கள்ளக்குறிச்சி அருகே இளைஞர் துடிதுடித்து பலி!

image

கள்ளிப்பாடி பகுதியைச் சேர்ந்த நடராஜ் கடந்த 28-ஆம் தேதி சொந்த வேலையாக சங்கராபுரம் வருவதற்காக சங்கராபுரம் பகுதியில் உள்ள முருகன் எலக்ட்ரிக் கடை அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்திசையில் வந்த தருண் குமார் ஒட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடராஜ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

News February 1, 2026

மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்

image

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரங்கப்பனூர் ஊராட்சியை சிறந்த ஊராட்சி என கடந்த குடியரசு தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் விருது பெற்றார். இந்த நிகழ்வை தொடர்ந்து இன்று (ஜன.2) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜ் ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் சந்தித்து விருதை வழங்கி வாழ்த்து பெற்றார்.

News January 31, 2026

கள்ளக்குறிச்சி: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News January 31, 2026

கள்ளக்குறிச்சி: தமிழ் தெரிந்தால் போதும், வங்கியில் வேலை!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டார அதிகாரி பதவிக்கு 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 165 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி இருந்தால் போதும். சம்பளமாக ரூ.48,480 – ரூ.85,920 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்.18.<> இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க.

News January 31, 2026

சட்ட ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் சட்ட ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று (ஜன.31)ஆம் தேதி நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் மற்றும் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அரசின் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 31, 2026

கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு!

image

கள்ளக்குறிச்சி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..

News January 31, 2026

FLASH: சின்னசேலத்தில் பயங்கர விபத்து!

image

சேலம் மாவட்டம் புளியங்குறிச்சியைச் சேர்ந்த லோகநாதன், சின்னசேலம் அரசுப் போக்குவரத்து பணிமனையில் நடத்துனராகப் பணியாற்றி வந்தார். இன்று பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, வாசுதேவனூர் தனியார் கல்லூரி அருகே எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி மீது மோதினார். இந்த கோர விபத்தில் லோகநாதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 31, 2026

கள்ளக்குறிச்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது.தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார்.இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 31, 2026

கள்ளக்குறிச்சி: ஒரே கேள்வி; உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி

image

உப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (17) 7ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். வீட்டு வேலை செய்யவில்லை என அவரது அம்மா ராஜகிளி திட்டியதால் கடந்த 18-ம் தேதி மகேஸ்வரி கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!