Kallakurichi

News February 2, 2026

நாளை புறநகர் பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் அமைச்சர்

image

கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை அருகே புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. நாளை பிப்.3 ஆம் தேதி மாலை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வவேலு மற்றும் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் இணைந்து திறந்து வைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News February 2, 2026

அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து துறை சார்ந்த அதிகாரிகளிடம், மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளார்.

News February 2, 2026

கள்ளக்குறிச்சி: கடைக்காரர் மாற்ற மறுக்கிறாரா?

image

கள்ளக்குறிச்சி மக்களே.. கடைகளில் வாங்கிய பொருளை கடை உரிமையாளர் மாற்றித் தர மறுத்தாலோ, பணத்தை திருப்பித்தர மறுத்தாலோ கவலை வேண்டாம். வாங்கிய பொருளை 15 நாட்களுக்குள் சேதாரமின்றி இருந்தால் மாற்றவும், பணத்தை திரும்ப பெறவும் உங்களுக்கு உரிமை உண்டு. கள்ளக்குறிச்சி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 04151-222449 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனே தீர்வு கிடைக்கும். ஷேர் பண்ணுங்க!

News February 2, 2026

கள்ளக்குறிச்சி: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<> ‘Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

உளுந்தூர்பேட்டையில் பயங்கர விபத்து!

image

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த கணேசன் மற்றும் அவரது மகன் ராம்குமார் ஆகிய இருவரும் சொந்த வேலையாக உளுந்தூர்பேட்டை செல்வதற்காக வாகனத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி எதிரே சாலையை கடக்க முயன்றனர். அப்போது, அந்த வழியாக வந்த பதிவெண் இல்லாத பைக் மோதியது. விபத்தில் கணேசன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து நேற்று(பிப்.1) போலீசார் வழக்கு பதிந்தனர்

News February 2, 2026

கள்ளக்குறிச்சி: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

image

கள்ளக்குறிச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

கள்ளக்குறிச்சி கிராமத்திற்கு விருது!

image

டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவின் போது, அரசின் திட்டப் பணிகளை உடனுக்குடன் செய்து முடித்த சிறந்த கிராமமாக ரங்கப்பனூர் ஊராட்சிக்கு விருது வழங்கப்பட்டது.இதனைப் பெற்றுக் கொண்ட ஊராட்சி தலைவர் அர்ச்சனா காமாராஜ், ரிஷிவந்திடம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திக், கலெக்டர் பிரசாந்த் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

News February 2, 2026

கள்ளக்குறிச்சி கிராமத்திற்கு விருது!

image

டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவின் போது, அரசின் திட்டப் பணிகளை உடனுக்குடன் செய்து முடித்த சிறந்த கிராமமாக ரங்கப்பனூர் ஊராட்சிக்கு விருது வழங்கப்பட்டது.இதனைப் பெற்றுக் கொண்ட ஊராட்சி தலைவர் அர்ச்சனா காமாராஜ், ரிஷிவந்திடம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திக், கலெக்டர் பிரசாந்த் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

News February 2, 2026

கள்ளக்குறிச்சி: ஆற்றில் மிதந்த ஆண் சடலம்!

image

கச்சிராயப்பாளையம் அடுத்த அக்கராயப்பாளையம் – பொட்டியம் சாலையில் குறுக்கே உள்ள கோமுகி ஆற்றில் நேற்று(பிப்.1) 80 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மிதந்தது. இதுகுறித்து தகவலறிந்து உடனே விரைந்த கச்சிராயப்பாளையம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இறந்தவர் குளத்து மேட்டு பகுதியைச் சேர்ந்த செங்கான்(80 என்பதும் , கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு சென்றது தெரிய வந்தது.

News February 2, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (பிப்ரவரி 1) இரவு முதல் இன்று (பிப்ரவரி 2) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!