India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சங்கராபுரம் குளத்துமேட்டு தெருவைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் கபார்கான். இவரது மனைவி இலாள் (56). சம்பவத்தன்று இவரது வீட்டு பீரோவில் இருந்த 10 பவுன் நகை மர்மமான முறையில் காணாமல் போனது.
இதுகுறித்து இலாள் அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளச்சாவி மூலம் திருடப்பட்டதா எனப் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அருகே பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள JCB ஓட்டுநர் சிவக்குமாரை, பொரசக்குறிச்சி காப்புக்காடு அருகே 2இளைஞர்கள் வழிமறித்தனர். அவர்கள் சிவக்குமாரை கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்து 10,000 ரூபாயைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் விசாரணை நடத்தி, கணங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயைக் (27) கைது செய்தனர். மேலும் வீரமணிகண்டன் என்பவரைத்தேடி வருகின்றனர்.

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் இங்கு <

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

கள்ளக்குறிச்சி மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க

கள்ளக்குறிச்சி மக்களே.., அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று(பிப்.13) காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் புகார் அளிக்க <

கல்வராயன்மலை அருகேயுள்ள கிணத்துவளவு கிராமத்தை சேர்ந்த தொப்புளி என்பவரின் விவசாய நிலத்திற்கு வன உரிமை பட்டா வழங்க லஞ்சம் பெற்ற இன்னாடு கிராம நிர்வாக அலுவலர் ரவியை இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கல்வராயன்மலை அருகேயுள்ள கிணத்துவளவு கிராமத்தை சேர்ந்த தொப்புளி என்பவரின் விவசாய நிலத்திற்கு வன உரிமை பட்டா வழங்க லஞ்சம் பெற்ற இன்னாடு கிராம நிர்வாக அலுவலர் ரவியை இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கள்ளக்குறிச்சி காவல்துறை கண்காணிப்பாளர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பெண்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வுப் பிரிவின் (IUCAW) காவல் துணை கண்காணிப்பாளராக செல்வம் நேற்று (பிப்.13) பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது பிரச்சினைகளை ரகசியமாக தெரிவிக்க வேண்டும் உடனடியாக நடவடிக்கை எடுத்து தகுந்த தண்டனை பெற்று தரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

புதுப்பட்டு, பாராதியார் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன்(78). சம்பவத்தன்று இவர், வீட்டின் படியில் இறங்கினார். அப்போது திடீரென கீழே விழுந்ததில் படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து. மேல் சிகிச்சைக்காக புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.