Kallakurichi

News September 27, 2024

மணலூர்பேட்டை அருகே விபத்தில் ஒருவர் பலி

image

மணலூர்பேட்டை அடுத்த ஆதிதிருவரங்கம் கோயிலுக்கு மாம்பழப்பட்டு கிராமத்தில் இருந்து இன்று நடை பயணமாக வந்த பக்தர்கள் பிறகு ஆட்டோவில் செல்லும் போது சொரையப்பட்டு அருகே புளிய மரத்தில் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாம்பழப்பட்டு சேர்ந்த பழனி என்பவர் பலியானார். 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 27, 2024

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டல மாவட்ட நகர ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர்கள் குமரகுரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பூர்வமான பணிகள் தொடர்பாகவும் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

News September 27, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ( 27.9.2024 ) இன்று 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News September 27, 2024

10,000 காலி பணியிடங்கள் நிரப்ப வேலை வாய்ப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணியா மட்டும் நோக்கத்தோடு கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பாக நூற்றுக்கு மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மூலம் 10,000 மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறது. இதை பயன்படுத்திக் கொள்ளவும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

News September 27, 2024

கள்ளக்குறிச்சியில் வேளாண்மை உற்பத்தி குழு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை உற்பத்தி குழு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News September 27, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக முக்கிய அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் உதயசூரியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாளை கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் காஞ்சிபுரம் தனியார் கல்லூரியில் பவள விழா நடைபெறுகிறது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட வடக்கநந்தல் சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன் மலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஒன்றிய நகர ஊராட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுத்துள்ளார்.

News September 27, 2024

கள்ளச்சாராய வழக்கில் கைதான 24 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 68 பேர் உயிரிழந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், 24 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதில், 24 பேரின் நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்தது. காணொலி மூலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, 24 பேரின் நீதிமன்ற காவலை, வரும் அக்.10ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

News September 27, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (26.09.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 26, 2024

தலைமை ஆசிரியர் பணியிட நீக்கம்

image

உளுந்தூர்பேட்டை அருகே ஒலையனூர் ஊராட்சி ஒன்றிய ஆதிதிராவிட நலத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் துரையரசன், 3ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், தலைமையாசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிட அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

News September 26, 2024

வரும் 27 ஆம் தேதி விவசாயிகள் குறைத்திருக்கும்

image

கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்ட ஆட்சியர் கூட்டறங்கில் வரும் 27ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெறுகிறது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு அவர்களின் குறைகளை மனுக்கள் ஆகவும் நேரடியாகவும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!