Erode

News January 14, 2025

ரங்கம்பாளையம் ரிங் ரோட்டில் கார் விபத்து

image

ஈரோடு ரங்கம்பாளையம் ரிங் ரோட்டில் வாகனங்கள் வேகமாக செல்வதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில் இன்று மதியம் அதிவேகத்தில் வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திரும்பிய போது, சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவற்றின் மீது ஏறி விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News January 14, 2025

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாழ்க்கை குறிப்பு

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஓடத்துறை எல்.எம்.பாலப்பாளையம் மாரப்பம்பாளையத்தை சேர்ந்த சீதாலட்சுமி போட்டியிடுகிறார். MA, M.Phil. பட்டதாரி. கணவர் பெயர் இரா. செழியன். மகள் இசைமதி (12).  சீதாலட்சுமி 13 ஆண்டுகள் ஆசிரியை பணி செய்துள்ளார். இவர் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்.

News January 14, 2025

ஈரோடு இடைத்தேர்தல்: நாதக வேட்பாளர் அறிவிப்பு

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் நேரடியாக களம் காண்கின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில், சீதாலட்சுமி போட்டியிடுவார் என, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

News January 14, 2025

போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

image

ஈரோட்டில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மது விற்பனை தொடர்பான ஆய்வுக்கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் போதைப்பொருட்களை விற்கும் நபர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News January 14, 2025

ஈரோட்டில் பிரச்சாரத்தை தொடங்கும் அமைச்சர்

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக, நாம் தமிழர் கட்சி என இருமுனை போட்டி நிலவுகிறது. இரு கட்சி வேட்பாளர்களும் ஜன.17 வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இந்நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவாக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தேர்தல் பிரச்சாரத்தை இன்று (ஜன.14) மாலை 4 மணிக்கு பெரியார்நகரில் இருந்து தொடங்குகிறார். அவர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகேட்டு வீடு, வீடாக செல்கிறார்.

News January 14, 2025

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3.30 லட்சம் திரும்ப ஒப்படைப்பு

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதாக 5 பேரிடம் மொத்தம் ரூ.5,52,860 பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உரிய ஆவணம் ஒப்படைக்கப்பட்டதால் சம்பந்தப்பட்ட 3 பேரிடம், பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.3,30,860 திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இந்த பணத்தை அவர்கள் இன்று பெற்றுக்கொண்டனர்.

News January 13, 2025

ஈரோடு இடைத்தேர்தல்: நா.த.க வேட்பாளர் இவரா?

image

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோபியை சேர்ந்த சீதாலஷ்மி என்பவர் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், திருப்பூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

News January 13, 2025

ஈரோட்டில் இன்று 6 பேர் வேட்புமனு தாக்கல்

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 2-வது நாளாக வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதில் மறுமலர்ச்சி ஜனதா கட்சி சார்பில் மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் சுயேட்சையாக ராஜசேகர், பானை மணி, முகமது கைபீர், கோபாலகிருஷ்ணன், இசக்கிமுத்து என 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மேலும், நூர்முகமது தனது 2-வது மனுவை தாக்கல் செய்தார்.

News January 13, 2025

காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

image

ஈரோடு நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சசிகுமார். இவர் அரச்சலூர் அருகே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து உடலை கைப்பற்றிய அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

News January 13, 2025

கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் DMK

image

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைந்ததையடுத்து பிப்.5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. காங்., போட்டியிடும் என கூறிக்கொண்டு இருந்த நிலையில், திடீரென திமுக போட்டியிடும் என்ற அறிவிப்பு ஈரோடு காங்., மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என கூறிவரும் நிலையில், 2024ல் கோவை மக்களவை தேர்தலில் எப்படி வெற்றி கண்டதோ, அதே பாணியில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியிலும் திமுக களம் காண்கிறது.

error: Content is protected !!