Erode

News January 16, 2025

ஈரோடு கிழக்கில் பதட்டமான வாக்குச்சாவடிகள்!

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்,5ல் நடக்கிறது. தொகுதியில் 109,636 ஆண் வாக்காளர்களும்,116760 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள்,37 பேர் மொத்தம், 226433 பேர் வாக்காளர்களாக உள்ளனர். கிழக்கு தொகுதி முழுவதும் அமைக்கப்பட்ட 237 ஓட்டுச்சாவடிகளில், 4 இடங்களில் உள்ள 9 ஓட்டுச்சாவடிகள், பதட்டமானவையாக அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீசாருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

News January 16, 2025

ஈரோடில் கணவன் மனைவி தற்கொலை!

image

ஈரோடு, கோபிசெட்டிபாளையம், சிறுவலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தனசேகரன் – பாலாமணி தம்பதி. இவர்கள் இருவரும் நேற்றிரவு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மேலும் தனது  குழந்தைகளான வந்தனா (10) மற்றும் மோனிஷா (7) இருவருக்கும், விஷம் கொடுத்துள்ளனர். இதில் ஆபத்தான நிலையில் குழந்தைகள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 16, 2025

பொங்கல் பரிசுத் தொகுப்பு: இன்று பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

image

ஈரோடு மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி 82 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், இதுவரை வாங்காதவர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு வியாழக்கிழமை (ஜன 16) சென்று பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்காதவர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு இன்று வியாழக்கிழமை சென்று பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட வழங்கல் அலுவலர் கூறினார்.

News January 16, 2025

ஈரோட்டில் நாளை முன்றாம் நாள் மனுத்தாக்கல்

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு, இரண்டாம் நாள் (ஜன.17) வேட்பு மனு தாக்கல், நாளை நடைபெற உள்ளது. இதற்கு முன் ஜனவரி 10 மற்றும் 13 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. இதுவரை 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், திமுக மற்றும் நாதக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. அதிமுக, பாஜக மற்றும் தேமுதிக கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 16, 2025

ஈரோட்டில் வெற்றிமாறனுக்கு பாராட்டு விழா

image

விடுதலை, விடுதலை-2 திரைப்படங்களின் இயக்குனர் வெற்றிமாறனுக்கு, பாராட்டு விழா, ஈரோடு பெரியார் மன்றத்தில் நாளை (ஜன 17) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில், நடத்தப்படும் இந்த விழாவில், திருமுருகன் காந்தி, ப.பா.மோகன், வி.பி. குணசேகரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

News January 15, 2025

ஈரோடு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சூரியம்பாளையத்துக்கு வரும் பிரதான குடிநீர் குழாய் வாழ்வு பழுதடைந்துள்ளது. இதனால் இன்று (ஜன. 15) பிற்பகல் முதல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த வாழ்வு சரி செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு குடிநீர் வழங்கப்படும் என்றும், எனவே குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் தெரிவித்துள்ளார்.

News January 15, 2025

ஈரோடு: நாதகவை சாதாரணமாக பார்க்க முடியாது’

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இந்த முறை திமுக நேரடியாகப் போட்டியிடுகிறது. இதற்கான பிரச்சாரத்தில் திமுக அமைச்சரும் ஈரோடு மேற்கு எம்எல்ஏவுமான முத்துசாமி ஈடுபட்டார். அப்போது நா.த.க தொடர்பான கேள்விக்கு அமைச்சர் முத்துசாமி, ‘நாம் தமிழர் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக முடிவு செய்து, வேட்பாளரை அறிவித்துள்ளது. ஒரு கட்சி சார்பில் அவர் போட்டியிடுகிறார். இதனால் போட்டி இருக்கத்தான் செய்யும்’ என்றார்.

News January 15, 2025

வங்கி ஏடிஎம் இயந்திரம் கல்லால் உடைத்து சேதம்

image

அந்தியூரில் உள்ள தனியார் வங்கியில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, வங்கிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை கற்களால் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அந்தியூர் போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவை பார்வையிட்டு, குற்றவாளியை தேடி வருகின்றனர். மேலும் இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள பணம் ஏதாவது எடுக்கப்பட்டுள்ளதா எனவும் விசாரணை நடந்து வருகிறது.

News January 14, 2025

கடம்பூர் அருகே யானை தாக்கி ஒருவர் பலி

image

ஈரோடு: கடம்பூர் மலை கிராமம் காடட்டியைச் சேர்ந்தவர் மாதேவப்பா (68). இவர் இன்று தேன் பாறை என்ற இடத்தில் விறகு எடுக்க சிலருடன் சென்றுள்ளார். அப்போது, புதர் மறைவில் இருந்து வெளியே வந்த யானை ஒன்று, விறகு எடுத்துக்கொண்டு இருந்தவர்களை தாக்கியது. மற்றவர்கள் தப்பி ஓட மாதேவப்பாவை யானை தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கேர்மாளம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2025

‘மக்கள் மனசாட்சிப்படி வாக்களிப்பார்கள்’

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவாக அமைச்சர் முத்துசாமி, கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தனர். அப்போது பேசிய அமைச்சர், 100% விதிகளை பின்பற்றி வாக்கு சேகரிப்போம். கடந்த இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். மக்கள் வாக்குச்சாவடிக்குள் சென்று அவர்கள் மனசாட்சிப்படி வாக்களிப்பார்கள்” என்றார்

error: Content is protected !!