Erode

News January 18, 2025

ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரிக்கை 

image

சைபர் குற்றவாளிகள் போலீஸ் அதிகாரி போல் போலி அழைப்புகள் மூலம் தனி நபர்களை அச்சுறுத்தி அச்ச உணர்வை உருவாக்கி பணத்தை ஏமாற்றுகிறார்கள். தெரியாத நபர்களின் வீடியோ அழைப்புகளை ஒருபோதும் ஏற்காதீர்கள். பொதுமக்கள் சைபர் கிரைம் புகாருக்கும் https://cybercrime.gov.in என்ற இணையதளம் மற்றும் சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930ஐ அழைக்கலாம் என ஈரோடு மாவட்ட சைபர் போலீசார் எச்சரித்துள்ளனர்.

News January 18, 2025

ஈரோடு நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கரம்

image

ஈரோடு அருகே வில்லரசம்பட்டி, ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரின் கோழிப்பண்ணையில் நேற்று இரவு தீ பற்றியது. தகவலறிந்த வந்த ஈரோடு தீயணைப்புதுறையினர் தண்ணீர் அடித்து தீயை அணைத்தனர். இதில், 2500 கோழிக்குஞ்சுகள் உட்பட ரூ. 15 லட்சம் மதிப்பான பொருட்கள் எரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் தீவிபத்து மின்கசிவினால் ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

News January 18, 2025

ஈரோடு; வேட்பு மனு பரீசீலனை நிறைவு

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 58 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனையில் திமுக, நாதக உள்ளிட்ட 55 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெறவருகிற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

News January 18, 2025

ஈரோடு இடைத்தேர்தல் இதுவரை 8 புகார்கள் பதிவு

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு பரிசீலனை இன்று நடைபெறுகிறது. பின் ஜன.,20 மாலை 3 மணி வரை வேட்புமனு வாபஸ் பெறலாம். பின் வேட்பாளர்களுக்கு சின்னம் ஓதுக்கீடு செய்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மேலும் தேர்தல் விதிமுறை மீறியதாக 5 வழக்கு பதிவும், சியுஜி செயலி மூலம் 3 புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்துள்ளார்

News January 18, 2025

ஈரோடு அணிக்கு கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநில அளவில் 25 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட் போட்டிக்கு, ஈரோடு அணிக்கான வீரா்கள் தோ்வு இன்று (சனிக்கிழமை), ஈரோடு வித்யா நகர் கே.எஸ்.கிரிக்கெட் நெட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் 1999 செப்டம்பர் 1ஆம் தேதிக்குப் பின் பிறந்த வீரர்கள், விளையாட்டு உபகரணங்களுடன் பங்கேற்கலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலாளர் சுரேந்திரன் தெரிவித்தார்.

News January 18, 2025

ஈரோடு: திமுக வேட்பாளர் பேட்டி!

image

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது, “இந்த இடைத்தேர்தலில் எந்த அரசியல் கட்சிகள் பெறாத வகையில் வெற்றி இருக்கும். குறைந்தபட்சம் 1.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். பல கட்சிகள் தனியாகவும், ஒட்டுமொத்தமாக நிறுத்தினாலும், திமுக வெற்றி பெறும். இந்த தேர்தலில் திமுக வெற்றி எழுதி வைக்கப்பட்ட வெற்றி” என தெரிவித்தார்.

News January 18, 2025

ஈரோட்டில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று காலை 9 மணி முதல், மாலை வரை, பவானி, ஊராட்சிகோட்டை, கோபி, நம்பியூர் சுற்றுவட்டாரப்பகுதிகள், கஸ்பாபேட்டை சுற்றுவட்டாரப்பகுதிகள், அந்தியூர், பர்கூர் சுற்றுவட்டாரப்பகுதிகள், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதிகள், எழுமாத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 18, 2025

ஈரோடு: நாணயங்களாக வந்த டெப்பாசிட் தொகை

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய, அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பு தலைவர் அக்னி ஆழ்வார் வந்தார். இவர் தனது வேட்புமனுக்கான டெப்பாசிட் தொகைக்காக நாணயங்களை எடுத்து வந்து, அதிகாரிகளிடம் சமர்பித்தார். இவற்றை எண்ணி சரிபார்க்கும் பணியில், அலுவலர்கள் ஈடுபட்டனர். இவர் ஏற்கெனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

News January 18, 2025

‘சீமான் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்’

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாதக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என ஈரோடு பெரியார் கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர். ஈரோடு எஸ்பி ஜவகர், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும், தேர்தல் அலுவலகத்தில், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ப.ரத்தினசாமி அளித்த மனுவில், மக்களிடையே இன மொழி அடிப்படையில் பிரிவினைவாத கருத்துக்களை பேசி வருகிறார் என்றார்.

News January 17, 2025

 நாதக சார்பில் 3 முறை வேட்புமனு தாக்கல்

image

ஈரோடு இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் எக்காரணத்திற்காகவும் வேட்புமனு நிராகரிக்கப்படக்கூடாது என்பதற்காக, தலைமையின் உத்தரவின் பேரில் மா.கி.சீதாலட்சுமி சார்பில் 3 முறை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாம். மேலும், மாற்று வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா என்பவரும் வேட்புமனு கொடுத்துள்ளாராம்.

error: Content is protected !!