India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு விண்ணப்பித்தால், 24 மணி நேரத்திற்குள் அனுமதி கிடைக்கும் என்று, மாவட்ட தேர்தல் அதிகாரி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, முதல் கட்ட பயிற்சி வகுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு இனி சுற்றியும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்பதனையும் தெரிவித்துள்ளார்.
கோபி அருகே உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (36). இவரது மகள் அட்சயா (வயது 10). இந்நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அட்சயா மனவேதனை அடைந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முந்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அட்சயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், ஜன.17 நிறைவு பெற்றது. ஜன.18 பரிசீலனை நிறைவடைந்தது. இதில் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. இன்று (ஜன.20) மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்பட உள்ளது. எத்தனை வேட்பாளர்கள் போட்டி என்பது இன்று தெரிந்துவிடும்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “ஜனநாயகத்தின் மீது வெறுப்பு தான் வரும். நியாய படி இது போன்ற தேர்தல்களை தேர்தல் கமிஷன் நடத்த கூடாது. இடைத்தேர்தல் நடத்தலாம். இடைத்தேர்தலுக்கு இடை தேர்தலா? மக்கள் எத்தனை முறை ஓட்டு போடுவார்கள். நாங்கள் போட்டியிட்டால் நேர்மையாக தேர்தல் நடத்துவார்களா? இந்த இடைத்தேர்தலை வேண்டாத வேலையாக பார்க்கிறோம்” என்றார்.
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை நேற்று நிறைவு பெற்றது. இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. இதனால் வெளியூர் சென்றிருந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். அவர்களுக்காக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஈரோட்டில் இருந்து கோவை, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் சென்றன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட, துணை ராணுவ படை வீரர்கள், 240 பேர் நாளை வரவுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, திருவனந்தபுரம், கொச்சின் மற்றும் நெய்வேலியில் இருந்து தலா 80 பேர் என, 240 துணை ராணுவ படை வீரர்கள் வருகின்றனர். ஈரோட்டில் கருங்கல்பாளையம் உள்ளிட்ட 12 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட உள்ளனர். மேலும், 160 துணை ராணுவ படை வீரர்கள் விரைவில் வருவார்கள் என்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து, அமைச்சர் சு.முத்துசாமி சூரியம்பாளையம் பகுதியில் இன்று (ஜன.19) காலை வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளை பொறுமையுடன் கேட்டறிந்த அமைச்சர், முத்துசாமி, அனைத்து அடிப்படை வசதிகளையும் தேர்தல் முடிந்ததும் செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செலவின பார்வையாளர் தினேஷ்குமார் ஜாங்கிட் தலைமையில், தேர்தல் செலவின கணக்குகள் ஆய்வு கூட்டம், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நாளை மறுநாள் (ஜன.21) காலை11 மணிக்கு நடக்கிறது. இதில் ஜன.10 முதல் 20 வரை உள்ள செலவின கணக்குகள் தொடர்பான ஆய்வு செய்யப்படுகிறது. வேட்பாளர்களின் செலவின கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து நாம் தமிழா் கட்சி விலக வேண்டும் என பேரம் பேச வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறினார். இதுதொடர்பாக அவா் அளித்த பேட்டியில், நாம் தமிழா் கட்சி வேட்பாளரை நேரில் சந்தித்தது கூட இல்லை. போட்டியிலிருந்து விலக வேண்டும் என திமுகவுக்கு பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காவலிபாளையம் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி கூட்டம் பவானிசாகர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பி ஏ பழனிச்சாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காரப்பாடி கண்டிசாலை வரபாளையம் காவலிபாளையம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த பூத் கமிட்டி முகவர்கள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.