Erode

News January 23, 2025

ஈரோடு: மின்சாதன பொருட்கள் பழுது நீக்க பயிற்சி

image

ஈரோடு அடுத்த சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரி சாலையில், வாசவி கல்லூரி அருகே, கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இலவசமாக எலக்ட்ரிக்கல் ஒயரிங் & மின்சாதன பொருட்கள் பழுது நீக்குதல் பயிற்சி வரும், 29-01-2025 முதல் 05-03-2025 வரை நடைபெற உள்ளது. இலவச பயிற்சி, சீருடை, உணவு, சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தொடர்புக்கு : 0424-2400338, 8778323213, 7200650604.

News January 23, 2025

அந்தியூர் பகுதியில் உலா வந்த சிறுத்தை

image

அந்தியூர், எண்ணமங்கலம், விராலி காட்டுப்புதூர் கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு ஒரு மணி அளவில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று, விராலி காட்டுப்புதூர் கிராமத்துக்குள் புகுந்தது. சிறுத்தை நடமாட்டம் அங்கு ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சியில் பதிவாகி இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

News January 23, 2025

ஈரோடு கலெக்டர் ஆய்வு 

image

ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்-2025ஐ முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா இன்று (22.01.2025) ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பி.பெ.அக்ரஹாரம், மாவட்ட அரசு இசைப்பள்ளியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடியினை ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் பலர் உடன் இருந்தார்.

News January 23, 2025

2026ல் அதிக தொகுதிகள் கேட்டு பெறுவோம்: செல்வபெருந்தகை 

image

ஈரோடு காங்கிரஸ் சார்பில் இன்று காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு ஈரோடு கிழக்கு தொகுதி திமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 2026 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் இருந்து அதிக தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம், தமிழ்நாடு முழுவதும் கிராம கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News January 22, 2025

விஜயை கூட்டணிக்கு அழைக்கவில்லை: செல்வபெருந்தகை

image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர் விஜய் அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றியே பேசி வருகிறார். எங்களது கொள்கையுடன் இணைந்து அவர் செயல்படுவதால் இந்தியா கூட்டணியில் வந்து சேர்ந்து விடலாம் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். ஆனால் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஒரே கொள்கையுடன் இருப்பதால் அவ்வாறு கூறினேன் என்றார்.

News January 22, 2025

தேர்தல் அலுவலர் திடீர் மாற்றம்: காரணம் என்ன?

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்.5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 46 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரி மனிஷ் திடீரென மாற்றப்பட்டார். அதற்கு பதிலாக ஓசூர் மாநகராட்சி ஆணையராக இருந்த ஸ்ரீகாந்த் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டார். இதற்கான காரனம் என்ன? (அடுத்த பக்கம்)

News January 22, 2025

தேர்தல் அலுவலர் மாற்றம் (2/2)

image

இடைத்தேர்தலில் கர்நாடாகவைச் சேர்ந்த பத்மாவதியின் வேட்புமனு ஏற்கப்பட்டது. அது எப்படி அவரது மனுவை ஏற்கலாம் என சுயேச்சை வேட்பாளர் கேள்வி எழுப்பினார். இது பெரும் சர்சையான பிறகு அவரது வேட்புமனு ரத்து செய்யப்பட்டது. வேறு மாநிலத்தில் வாக்குரிமை வைத்திருப்பவர், மற்றொரு மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடியாது என விதியுள்ளது. இதனையடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததால், தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டார்.

News January 22, 2025

ஈரோடு: தேர்தல் அதிகாரியாக ஸ்ரீகாந்த் பொறுப்பேற்றார்

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், பெங்களூருவை சேர்ந்தவரின் வேட்புமனு ஏற்கப்பட்டது சர்ச்சையான நிலையில், தேர்தல் அதிகாரியாக இருந்த மணிஷ் மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு மாற்றாக, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரீகாந்த்தை தேர்தல் ஆணையம் நியமித்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக ஸ்ரீகாந்த், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். 

News January 22, 2025

ஈரோட்டில் ரயில் மோதி தொழிலாளி பலி!

image

ஈரோடு,கொல்லம்பாளையம் காட்டு தெருவில் வசித்த தொழிலாளி மூர்த்தி 56. பொங்கல் பண்டிகைக்காக சகோதரி வீட்டுக்கு வந்துள்ளார். மது குடிக்கும் பழக்கம் இருந்தது. எட்டு ஆண்டுகளாக காது கேட்காது. நேற்று மதியம் ஊஞ்சலுார்-பாசூர் ரயில்பாதையை கடக்க முற்பட்டார். அப்போது ஈரோடு-செங்கோட்டை பாசஞ்சர் ரயில் மோதியதில், தலை துண்டாகி பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 22, 2025

ஈரோடு கிழக்கு தேர்தல் அதிகாரி மாற்றம்

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியாக இருந்த மணிஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய தேர்தல் அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்தவரின் வேட்புமனு ஏற்கப்பட்டது சர்ச்சையான நிலையில், தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!