India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சத்தி கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் கவுதமின் மனைவி அசின் (19). இவர்களுக்கு 3 மாத குழந்தை உள்ளது. இந்நிலையில் இன்று குழந்தையை அசின் வெள்ளியம்பாளையம்புதூர் அங்கன்வாடி மையத்துக்கு அழைத்து சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த குழந்தையை ஜிஎச்க்கு கொண்டு சென்றபோது உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சியை வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது பிரசாரத்தை தொடங்கினார். ஈரோடு காவேரிசாலையில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், “வாக்கை விற்கும் அரசியல் முறையை ஏற்கக் கூடாது. நாம் நோட்டை வாங்கிக்கொண்டு ஓட்டை விற்கிறோம். அவர்கள் ஓட்டை வாங்கிக்கொண்டு நாட்டை விற்கிறார்கள்”, என்றார்.
ஈரோடு கிழக்கு & மேற்கு மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு மாநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்திற்கு, விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை இன்று தவெக தலைவர் விஜய் நியமித்துள்ளார். இதில் மாவட்ட தவெக செயலாளர்: பாலாஜி, மாவட்ட இணைச் செயலாளர்: அப்துல்ஹக்கிம், பொருளாளர்: முருகேசன், துணை செயலாளர்: பிரகாஷ், மஞ்சு மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில், யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், சூப்பர் பாஸ்பேட் போன்ற உரங்கள் வேளாண் பயன்பாட்டிற்கு மானிய விலையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், யூரியா 45 கிலோ மூட்டை, மானிய விலையில் ரூ.266.50க்கு வழங்கப்படுகிறது என ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.
சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அம்மாபாளையம், பசுவட்டி, முகாசிப்பிடாரியூர், எக்காடம் பாளையம், குமராபுரி, ராமலிங்கபுரம், உப்பிலிபாளையம் பகுதிகளில் இன்று மதியம் சுமார் 10 நிமிடம் வீடுகளில் உள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகள், கூரைகள் லேசாக அதிர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், இதற்கான காரணம் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா், தனபிரனேஷ் தலைமையிலான குழுவினா், நேற்று மாலை வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பும் வாகனத்தில், உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச்செல்லப்பட்ட, ரூ.1.50 கோடியை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டுச் சென்றனா்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் ஈரோடு தாலுகா தவிர்த்து, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, பவானி, சத்தி உள்ளிட்ட 9 தாலுகாவிலும் உள்ள ரேஷன் கடைகளில், நடக்கும் முகாம்களில், அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். ரேஷன் கார்டு புதுப்பித்தல், பெயர் நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கு மனு வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
பொதுமக்கள் ஏடிஎம் பயன்படுத்தும் போது எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர். உங்கள் பின் எண்ணை யாருடனும் பகிர வேண்டாம். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு பிறகும் உங்கள் ரசீதுகளை எப்போதும் வைத்திருங்கள். உங்கள் பரிவர்த்தனையின் போது உங்களுக்கு உதவ யாரும் முன்வர அனுமதிக்காதீர்கள் என, ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது அதை ஒட்டி ஐந்து பறக்கும் படையில் அமைக்கப்பட்டு தேர்தல் பட்டுவாடாவுக்கு பணம் கொண்டு செல்லப்படுகிறதா என கண்காணித்து வருகின்றனர். பணம் ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில் இன்று தனியார் ஏடிஎம் நிறுவனத்தார் உரிய ஆவணம் இல்லாமல் ₹ 1.50 கோடி எடுத்துச் சென்றதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்வதற்காக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை (ஜன.24) ஈரோட்டுக்கு வருகை தருகிறார். மாலையில் கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் தனது பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.