Erode

News February 1, 2025

ஈரோட்டில் சர்வதேச கருத்தரங்கு

image

ஈரோடு சி.என்.சி தமிழ்த்துறை, மலேசியா உலகத்தமிழ்க்காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன சாா்பில் ‘வாழும் வள்ளுவம்’என்ற தலைப்பில் திருக்குறள் குறித்த சா்வதேச கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. தமிழ்த்துறை தலைவா் சி.அங்கயற்கண்ணி வரவேற்றார். கல்லூரியின் முதல்வா் சு.மனோகரன் தலைமை வகித்தாா். திருக்குறளை வாழ்க்கைக்கான வழிகாட்டியாக கொள்ள வேண்டும் என உலகத்தமிழ் காப்பிய ஆராய்ச்சி நிறுவனா் பா.தனேஷ் கேட்டுக்கொண்டார்.

News February 1, 2025

 டாஸ்மாக் கடைகளுக்கு தொடர் விடுமுறை

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க பிப்.3 முதல் பிப்.5 வரை 3 நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும், தனியார் மதுபான கூடங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதேபோல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் பிப்.8 மதுக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.

News February 1, 2025

கடன் தொல்லையால் தற்கொலை

image

சித்தோடு கூட்டுறவு காலனியை சேர்ந்த சதீஸ்குமார் (33) என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி, மகன் உள்ளனர். சதீஸ்குமார் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்தார். இதில் மனவேதனையுடன் காணப்பட்ட அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

News January 31, 2025

துணை ராணுவத்தில் டிரைவர் வேலை

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10 வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். <>விண்ணப்பிக்க கிளிக்,<<>> SHARE பண்ணுங்க

News January 31, 2025

ஈரோடு: திமுகவில் இணைந்த தேமுதிகவினர்

image

ஈரோடு மாநகர தேமுதிகவினர் சுமார் 59 பேர் நேற்று திமுகவில் இணைந்தனர். இதில், ஈரோடு மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் திருநாவுக்கரசு தலைமையில், அமைச்சர் சு.முத்துச்சாமி முன்னிலையில் தேமுதிகவினர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். உடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சந்திரகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் இமயம் சிவக்குமார், துணை அமைப்பாளர் சுப்ரமணியம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News January 31, 2025

இடைத்தேர்தல்: வளைத்து வளைத்து பணப்பட்டுவாடா

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வளைத்து வளைத்து பணம் விநியோகம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்.5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரேஷன் கார்டு மூலம் வாக்காளர்களை கணக்கெடுத்து முதலில் டோக்கன்கள் விநியோகம் செய்து, கட்டு கட்டாக பணத்தையும் வைத்துக் கொண்டும் விநியோகம் செய்வதாக கூறுகின்றனர். 

News January 30, 2025

ஈரோடு: 108 ஆம்புலன்ஸ் மகத்தான சாதனை!

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், 59,772 நோயாளிகளை, ஜனவரி 24 முதல், டிசம்பர் 24 வரை காப்பாற்றியுள்ளனர். சாலை விபத்து, 15728,  விஷம் குடித்தவர்கள் 2,060, சர்க்கரை நோயாளிகள் 1,436, வலிப்பு நோய் ஏற்பட்டவர்கள் 1693, குழந்தை பிறப்பு 562, இதய பாதிப்பு 987, கர்ப்பிணி பெண்களை மருத்துவமனைக்கு கூட்டி சென்றது 14,258 ஆகியவர்களின் உயிரை காப்பாற்றி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

News January 30, 2025

மீண்டும் பிரியாணி, பாட்டில், பணம்

image

ஈரோட்டில் வரும் பிப்.5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்பட 46 பேர் போட்டியிடுகின்றனர். முக்கிய கட்சி சார்பில் தினமும் பொதுமக்கள் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிக்கின்றனர். இதில் வாக்காளர்களுக்கு பிரியாணி, மதுபாட்டில், பணம் தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

News January 30, 2025

ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி யாருக்கு?

image

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப்.5ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கிக் கொண்டுள்ளதால் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. இத்தொகுதியில் திமுக சார்பில் சந்திரகுமார், நாதக சார்பில் சீதாலட்சுமி என 46 பேர் போட்டியிடுகின்றனர். இதில், அதிமுக, தேமுதிக, பாஜக போட்டியிடவில்லை. வெற்றி யாருக்கு? மக்களே நீங்க சொல்லுங்க.

News January 29, 2025

ஈமு கோழி மோசடி: ரூ.19 கோடி அபராதம்

image

பெருந்துறையில் ’சுசி ஈமு பார்ம்ஸ்’ இந்தியா என்ற நிறுவனத்தை தொடங்கி, பல கோடி மோசடியில் ஈடுபட்ட ஈரோட்டை சேர்ந்த குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, மோடி செய்த தொகையான ரூபாய் 19 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012 முதல் நடைபெற்ற வந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டது.

error: Content is protected !!