Erode

News February 18, 2025

பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

image

சித்தோடு நரிப்பட்டி பகுதியில் பிளாஸ்டிக் கயிறு தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்களை எரிந்து சேதமானது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரி சிங். இவர் இந்த பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அரைத்து அதிலிருந்து நைலான் கயிறு தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார். இந்நிலையில் இங்கு தீ விபத்து ஏற்பட்டதால், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 17, 2025

ஈரோடு அதிமுக பொறுப்பாளர்கள் நியமனம்!

image

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான கட்சிபணிகளை துரிதப்படுத்தும் வகையில், மாவட்ட பொறுப்பாளர்களை அதிமுக தலைமை நியமித்துள்ளது. இதில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ஏ.கே. செல்வராஜும், ஈரோடு மாநகர் பொறுப்பாளராக ஆனந்தனும், ஈரோடு புறநகர் கிழக்கு பொறுப்பாளராக சிவசாமியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் முன்னாள அமைச்சர் செங்கோட்டையைன் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News February 17, 2025

411 காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு <>இந்த லிங்கை க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News February 17, 2025

சிக்கய்ய நாயக்கர் கல்லூரி: அரசு நடத்த அனுமதி

image

ஈரோட்டில் பெரியாரால் தொடக்கப்பட்ட சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்த அனுமதி. தமிழ்நாடு அரசு ஏற்று நடத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு 3 ஆண்டுகளுக்கு பிற வழங்கியுள்ளது. மேலும், இங்கு ஐஏஎஸ் அகாடமி, நூலகம், விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

News February 17, 2025

போக்ஸோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவு

image

ஈரோடு ஜெயகோபால் வீதியை சேர்ந்தவர் அலாவுதீன் (31). இவரை போலீஸாா், போக்சோவில் கைது செய்தனா். இந்நிலையில், அலாவுதீனிடம் தனிப்பயிற்சி மையத்தில் படித்து வரும் மாணவர்கள், பெற்றோா்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் காவல் அலுவலகத்தில் நேற்று காலை திரண்டு, அவர் மீது எந்த தவறும் இல்லை எனவும். வேண்டுமென்றே பொய் புகார் கூறி கைது செய்துள்ளனர். அவரை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

News February 16, 2025

21,413 போஸ்ட் ஆபிஸ் காலியிடங்கள் விண்ணப்பிப்பது எப்படி?

image

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும் . அஞ்சல்துறையில் 21,413 கிராம அஞ்சல் பணியாளர்கள் (GRAMIN DAK SEVAKS -GDS) புதிதாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க <>லிங்கை <<>>க்ளிக் செய்யவும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்.

News February 16, 2025

தந்தை கண் எதிரே மகள் விபத்தில் உயிரிழப்பு

image

குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன். இவரது மகள் கோபிகா வயது (25). கோவையில் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று கோவையிலிருந்து- சித்தோடு வந்த மகளை தனது தந்தை கண்ணையன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்துச் சென்ற பொழுது, தனியார் மில் அருகே வந்து கொண்டிருந்த பொழுது பஸ் மோதி கோபிகா உயிரிழந்தார். கண்ணையன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சித்தோடு போலீசார் விசாரணை.

News February 16, 2025

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை

image

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ம் வகுப்பு தேர்ச்சி போதும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். <>விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்<<>>. மார்ச்4 கடைசி தேதி.

News February 16, 2025

திமுக ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி ராஜினாமா ? 

image

பெருந்துறை ஒன்றியத்தின் திமுக செயலாளராக 20 ஆண்டுக்கு மேல் பணியாற்றி வருபவர் கே.பி.சாமி, தற்போது பெருந்துறை ஒன்றியம் 3 ஆக பிரிக்கப்பட்ட நிலையில் பெருந்துறை தெற்கு ஒன்றிய செயலாளராக கே.பி.சாமி பொறுப்பு வகித்தார். பெருந்துறை, பவானி தொகுதியை தனியாக பிரித்து ஈரோடு மத்திய மா.செ.வாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கே.பி.சாமி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல் பரவுகிறது. 

News February 16, 2025

மாணவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

image

ஈரோடு ஜெயகோபால் வீதியைச் சேர்ந்த அலாவுதீன் (31). இவா் ஈரோட்டில் தனியார் பள்ளி தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அலாவுதீன் பணியாற்றும் பள்ளியில் +2 படிக்கும் 17 வயது மாணவரின் கைப்பேசிக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி, தனிமையில் சந்திக்குமாறு அழைப்பு விடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பெற்றோர்கள் புகார் கொடுக்க, போலீஸ்சார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனார்.

error: Content is protected !!