Erode

News February 20, 2025

ஈரோட்டில் நாளை 105 வாகனங்கள் ஏலம் 

image

ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 4 சக்கர, இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 105 வாகனங்களின் பொது ஏலம், ஆனைக்கல்பாளையத்தில் நாளை (பிப்.21) நடக்கிறது. ஏலம் எடுப்பவர்கள், காலை 8 மணி முதல் 10 மணிக்குள் இருசக்கர வாகனத்திற்கு ரூ.2,000, 4 சக்கர வாகனத்திற்கு ரூ.5,000 முன்பணமாகவும், ஏலம் எடுத்தவுடன் முழுபணத்தை செலுத்த வேண்டும் என்றும் காவல் கண்காணிப்பாளர் ஜவகர் அறிவித்துள்ளார்.

News February 20, 2025

போஸ்ட் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க!

image

அஞ்சல் துறையில் இருக்கும் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தேர்வு கிடையாது. 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நியமனம் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் 77 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி மார்ச் (3.3.2025). விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க.

News February 20, 2025

தானே பேசி தானே சிரிப்பவர் சீமான்; நாஞ்சில் சம்பத்

image

ஈரோட்டில் நேற்று விசிக சார்பில் “இது பெரியார் மண்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி. சந்திரகுமார், திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்று உரையாற்றினர். “தானே பேசி தானே சிரிக்கும் பழக்கம்” சீமானிடம் உள்ளது என நாஞ்சில் சம்பத் கூறினார்.

News February 20, 2025

மாவட்ட அளவிலான கபடி போட்டி

image

பவானி அருகே பொன்னகரம் ஸ்ரீபுது மாரியம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு ஸ்டார் பிரண்ட்ஸ் கபடி குழு நடத்தும் முத்தான முதலாம் ஆண்டு கபடி போட்டி வரும் மார்ச் 7, 8ஆம் தேதி இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் 32 அணிகள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளன. முதலாம் பரிசானது 15,000 அதற்கான கோப்பையும் வழங்கப்படுகிறது.

News February 20, 2025

மக்களுக்கு நன்றி கூற வரும் எம்.பி 

image

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், இந்திய கூட்டணியின் சார்பாக நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். இந்நிலையில் வரும் 22ஆம் தேதி வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி சொல்லி, குறைகளை கேட்க வருகிறார். மேலும், காங்கேயம் தொகுதிக்குட்பட்ட சென்னிமலை ஒன்றியத்தில் காலை 8 மணி முதல் இரவு வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

News February 20, 2025

தொழில் வணிக சங்கங்களுடன் ஆலோசனை

image

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 13வது செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். ஸ்டீல் பேப்ரிக்கேஷன் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் முருகானந்தம் வரவு- செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.

News February 20, 2025

BREAKING: சீமான் இன்று ஆஜராகவில்லை

image

ஈரோடு, கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சீமான் இன்று (பிப்.20) ஆஜராகவில்லை. ஈரோடு இடைத்தேர்தலின் போது, பெரியார் குறித்த அவதூறு கருத்து தெரிவித்தற்காக சீமான் நேரில் ஆஜராகும் படி போலீசார் சம்மன் அனுப்பிருந்தனர். ஆனால், அவர் இன்று ஆஜராகவில்லை. அவருக்கு பதில் அவரது வழக்கறிஞர் நன்மாறன் ஆஜராகி காவல் ஆய்வாளரிடம் விளக்கம் அளித்தார். 

News February 20, 2025

மஞ்சள் என்றாலே “நம்ம ஈரோடு தான்”

image

ஈரோடு “மஞ்சள் நகரம்” எனப் புகழ்பெற்றது. சின்ன நாடன், பெரும் நாடன் போன்ற அரியவகை மஞ்சள் ரகங்கள் பயிரிடப்படுகின்றன. காவேரி, பவானி நதிப் பாசனத்தால் மஞ்சள் சாகுபடி செழித்தது. 2019ல் புவிசார் குறியீடு பெற்ற ஈரோடு மஞ்சள், உலகளவில் தரம் மற்றும் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றது.

News February 20, 2025

பண்ணாரியம்மன் கதை தெரியுமா மக்களே?

image

அக்காலத்தில் துணி துவைப்பதற்காக ஒரு தம்பதியினர் ஆற்றங்கரைக்கு சென்றுள்ளனர். அப்பெண் கர்பிணியாக இருந்ததால், பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதில் 2 பெண் குழந்தைகள் பிறந்ததில், ஒரு குழந்தையை தூக்க முடியாமல் அங்கே விட்டு வந்துள்ளனர். ஊர் மக்கள், அக்குழந்தையை தூக்க சென்றனர். ஆனால் யாராலும் தூக்க முடியவில்லை. பின் இக்குழந்தையே தெய்வமாக எழுந்தருளியதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு கதை உண்டு.

News February 20, 2025

தமிழகத்தின் ‘சூரத் ஈரோடு’

image

தமிழ்நாட்டின் நெசவுத் தொழிலின் மையமாக விளங்குகிறது ஈரோடு. பருத்தி நூல், துணி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்நகரம், “நெசவுப் பள்ளத்தாக்கு” என்று அழைக்கப்படுகிறது. கைத்தறி முதல் இயந்திர நெசவு வரை, ஈரோடு நெசவுத் தொழிலின் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இன்றும் பாரம்பரிய நெசவுகள் மற்றும் நவீன தொழில்நுட்பம் இணைந்து இத்தொழில் வளர்ந்து வருகிறது .

error: Content is protected !!