India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ், நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 16 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் Staff Nurse, Hospital Worker உள்ளிட்ட பணிகள் காலியாக உள்ளன. இதில் வேலைக்கு ஏற்றார்போல், 12ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு வரும் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கு <
ஈரோடு பீடி தயாரிப்பு நிறுவனங்களுடன், கடந்த 14 தேதி முதல் 19 தேதி வரை போனஸ் வழங்குவது மற்றும் பொது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், நடப்பு ஆண்டுக்கான போனஸாக, அனைத்து பீடி சுற்றும் தொழிலாளா்களுக்கும், அவா் சுற்றிய 1,000 பீடிகளுக்கு, ரூ.34 வீதம் கணக்கிட்டு வழங்கப்படும். ரம்ஜான் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பு மார்ச் 24 தேதிக்குள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு அடுத்த நசியனூர் – தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் நோக்கி சென்ற ஜான் என்பவரின் காரை மறித்து ரவுடி கும்பல் வெட்டியதில் ஜான் உயிரிழந்தார். அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சதீஷ், சரவணன், பூபாலன் ஆகியோரை காவல்துறையினரால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். இந்நிலையில் பிடிக்கப்பட்ட 4 பேர் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
ஈரோடு, பெருந்துறை அருகே பிரபல ரவுடி ஜான் என்கிற சாணக்கியா வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை வழக்கில் ஜாமீன் பெற்று பெருந்துறையில் தங்கி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்த நிலையில், இன்று காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்து கொண்டிருந்த போது ஜானை மர்ம நபர்கள் வெடிக்கொலை செய்தனர். இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் சுட்டு பிடித்தனர்.
நேற்று பாராளுமன்ற ரயில்வே விவாதம் கூட்டத்தில் பங்கேற்ற ஈரோடு பாராளுமன்ற எம் பி கே இ பிரகாஷ் கலந்து கொண்டு பேசினார். அதில் ஈரோடு ரயில் நிலையம் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. ரயில் பாதை முழுவதும் மின்மயமாக்க வேண்டும், ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா அதிகரிக்க வேண்டும், அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ஜான் என்கிற சாணக்கியன்- ஆதிரா தம்பதி தங்களது காரில் திருப்பூரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரை வழிமறித்த கும்பல், தம்பதியைக் கொடூரமாக வெட்டியது. சம்பவ இடத்திலேயே கணவர் ஜான் உயிரிழந்தார். மனைவி ஆதிரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோட்டில் வெயில் அதிகரித்து காணப்படுகிறது. இன்று அதிகபட்ச வெப்பநிலை 31.32 செல்சியஸாகவும் . குறைந்தபட்ச வெப்பநிலை 25.58 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. எனவே கோடை வெப்ப அலைகளால் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர்பானங்களைத் தவிர்த்து, பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், என ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரோட்டில் வரும் 22ஆம் தேதி வரை அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. மேலும், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க.
பவானியில் சில நாட்களுக்கு முன் உடல்முழூவதும் கல் கட்டிய நிலையில் சடலத்தை போலீசார் கைப்பற்றினார். விசாரணையில், இறந்தவர் மதியழகன் என்பவதும் மது போதையில், தாயின் சொத்துகளை விற்ற பணத்தை கேட்டு துன்புறுத்தியதால் தனது மூத்த மகனுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளது. மதியழகனின் மனைவி கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், பழி தீர்க்க அவரது உறவினர்களிடம் சேர்ந்து கொலை செய்துள்ளார்.
சென்னிமலை, மலையடிவாரத்தில் உள்ள வாரச்சந்தை பேட்டையில், திருநகர் காலணியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி கணேசன் என்பவர் இரத்தக்காயங்களுடன் பிணமாகக் கிடந்தார். இது தொடர்பாக சென்னிமலை போலீசார், கணேசன் உடன் மது அருந்திய இருவரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கொலை செய்திருக்கலாம் என்றும், கொலைக்கான காரணம் என்ன என்பதும் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.