Erode

News February 27, 2025

பவானிசாகர் அணை நீர்மட்ட நிலவரம்

image

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் பவானிசாகர் அணை உள்ளது. பவானிசாகர் அணை 105 அடி நீர்மட்ட கொள்ளளவு கொண்டது. இந்நிலையில் பவானிசாகர் அணைக்கு இன்று வினாடிக்கு 126 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 87.63 அடியாக உள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 900 கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

News February 27, 2025

யூனியன் வங்கியில் வேலை: அப்ளை பண்ணுங்க

image

பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயது உடையவராக இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் <>மார்ச் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <<>>ஷேர் பண்ணுங்க

News February 27, 2025

ரயில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

image

ஈரோடு, கோவை பெரிய பஜாா் வீதி, பிரசன்டேஷன் கான்வென்டை சோ்ந்தவா் கன்னியாஸ்திரி மேரி நிா்மலா (67). கடந்த 24 தேதி மதியம் 12 மணிக்கு ஈரோடு அருகே மாவேலிபாளையம் வந்து கொண்டு இருந்தது. மேரி நிா்மலா ரயிலில் உள்ள கழிவறைக்கு சென்றாா். அப்போது நிலைதடுமாறி ஓடும் ரயிலில் இருந்து வெளியே தவறி விழுந்து படுகாயம் அடைந்து இறந்தார். இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

News February 27, 2025

ஈரோட்டில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், ரங்கம்பாளையம், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மார்ச் 15 மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. மேலும் தகவலுக்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் 86754 12356, 94990 55942 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் இதில் பங்குபெற படத்தில் உள்ள QR – யை ஸ்கேன் செய்து கட்டாய முன்பதிவு செய்ய வேண்டும்.

News February 26, 2025

விதைப்பண்ணை வயலில் கலெக்டர் ஆய்வு

image

ஈரோடு, கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா, இன்று (26.2.2025) பெருந்துறை, காஞ்சிக்கோவில் பகுதியில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ள விதைப்பண்ணை வயலை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுவின் போது, பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர். பி.ரவிக்குமார், பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவசங்கர், தேவகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News February 26, 2025

அரசு பேருந்து – பைக் மோதி ஒருவர் உயிரிழப்பு 

image

அந்தியூர் அடுத்த பர்கூர், மேற்குமலை கொங்காடை பகுதியில், இன்று காலை, அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பைக்கில் வந்த 3 பேரில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயங்களுடன், பர்கூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

News February 26, 2025

கைப்பிடி இல்லாத காகிதப் பைக்கு வரிவிலக்கு வேண்டும்

image

ஈரோடு, மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு தமிழ்நாடு பேப்பர் பை உற்பத்தியாளா்கள் சங்கச்செயலாளா் சென்னிமலை எஸ்.கே.ராமசாமி அனுப்பியுள்ள கடிதத்தில், சிறு,குறு தொழில் தயாரிப்பான கைப்பிடி இல்லாத காகிதப்பைத் தொழிலுக்கு 18 % ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. காகித பை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, முழு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

News February 26, 2025

போஸ்ட் ஆபிஸில் விபத்து காப்பீடு பதிவு சிறப்பு முகாம்

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும், விபத்து காப்பீடு பதிவு செய்யும் திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இத்திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாமானது, பிப்ரவரி 28ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. எனவே பொதுமக்கள் அவரவருக்கு பொருத்தமான விபத்து காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் தெரிவித்துள்ளார்.

News February 26, 2025

புகையிலை பொருள்கள் விற்பனை செய்த பெண் கைது

image

ஈரோட்டில், புகையிலை பொருள்கள் விற்பனையை தடுக்க, மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கே.ஏ.எஸ்.நகர் முதல் வீதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில், பான்மசாலா, குட்கா பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், 117 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும்  கடை உரிமையாளர் அனிதா என்பவர் மீது வழக்குப்பதிந்து, செய்து கைது  செய்தனர்.

News February 25, 2025

ஈரோடு: பவளமலை முருகன் கோயில்!

image

கோபியில் உள்ள பவளமலை என்ற சிறிய குன்றில், புகழ்பெற்ற முத்துகுமாரசாமி கோயில் உள்ளது. பச்சமலை முருகனை பிரதிஷ்டை செய்த, துர்வாச முனிவர் தான், பவளமலை முருகனையும் பிரதிஷ்டை செய்தாராம். பவளத்தின் நிறம் சிவப்பு, சிவப்பின் அதிபதி செவ்வாய். செவ்வாயின் அதிதேவதை சுப்பிரமணியர், பவளமலையில் தரிசனம் செய்வதன் மூலம், செவ்வாய் தோஷம் நீங்குகிறதாம். செவ்வாய் கிழமையில் பவளமலை ஆண்டவனை வழிபட்டால், நினைத்தது நடக்குமாம்.

error: Content is protected !!