India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளராக வெ.கிருஷ்ணமூர்த்தி என்பவர் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முதல் அப்பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். மேலும் பவானி, அந்தியூர் தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய செயலாளர் விரைவில் தேர்வு செய்து அறிவிக்கப்படுவார் என பாமக தலைமை நிலைய சார்பில் அக்கட்சி நிறுவனர் ச.இராமதாஸ் அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த கனமழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கும் எனவும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிகிறது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மக்களே ஷேர் பண்ணுங்க!
ஈரோடு: பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இவர்களுக்கு 420 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், 120 வீடுகள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பவானிசாகர் பகுதி அனைத்து கட்சியினர் மற்றும் மக்கள் ஆகஸ்டு 15 அன்று அனைத்து வீட்டிலும் கறுப்பு கொடியேற்றி, கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஆக.12) நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத் திட்டம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை (ம) காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட 325 மனுக்கள் பெறப்பட்டு, நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
ஈரோடு அடுத்த கருங்கல்பாளையம், காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமை ராஜ கோபால் சுன்கரா வகித்தார். இந்நிகழ்ச்சியில் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் ஈரோடு எம்பி., பிரகாஷ், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில், சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. ஈரோடு, திருநகர் காலனி பகுதியில் தொடங்கிய பேரணியை, ஈரோடு மாவட்ட எஸ்.பி., கு.ஜவகர் இ.கா.ப., தலைமையேற்று துவங்கி வைத்தார். இதில் வாசவி கல்லூரி மற்றும் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 16ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு அல்லது 86754 12356, 94990 55942 என்ற அலைபேசி எண் அல்லது erodemegajobfair@gmail.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூர்லிருந்து இன்று காலை சத்தியமங்கலம் நோக்கி சென்ற லாரி திம்பம் மலைப்பாதை 17 வளைவில் கட்டுப்பாட்டை இழந்து 120 அடி பள்ளத்தி கவிழ்ந்தது . ஆனால் லாரி மரத்தில் சிக்கியபடி நின்றுள்ளது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் லாரியின் அடியில் சிக்கிய ஓட்டுநரை மீட்டனர். இதில் ஓட்டுநர் சிறுகாயத்துடன் உயிர்தப்பினார். விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சத்தியமங்கலம் அடுத்த தொப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே ஆலாம்பாளையம், எரங்காட்டூர், கரிதொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், கோடேபாளையம், நால்ரோடு மற்றும் முடுக்கன்துறை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் கம்மி விலையில் தங்கம் கிடைப்பதாக விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். தங்கத்துக்கான வரி குறைந்ததையடுத்து நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், ஆன்லைனில் தங்கம் விலை குறைவாகக் கிடைப்பதாக விளம்பரம் செய்து, ரூ.7 லட்சம் பணம் மற்றும் நகைகளை அபகரித்த கும்பலை சத்தியமங்கலம் போலீசார் கைது செய்தனர். மக்களே உஷார்.
Sorry, no posts matched your criteria.