Erode

News January 10, 2026

ஈரோடு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

image

குண்டடம் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ். இவர் ஈரோட்டில் வசித்து வந்த 24-வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை உணவு வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் அளித்தார். இவ்வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் பரிந்துரை செய்தது.

News January 9, 2026

ஈரோடு: பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் இனி What’s App-ல்

image

ஈரோடு மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். (ஷேர் பண்ணுங்க).

News January 9, 2026

ஈரோடு : SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

image

ஈரோடு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி நாளை ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த நல்ல தகவலை SHARE செய்யுங்க

News January 9, 2026

ஈரோடு: திடீர்’னு பெட்ரோல் காலியா? இத பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில், திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது. அந்நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 9, 2026

ஈரோட்டில் இலவச கிரைண்டர் வேண்டுமா? APPLY NOW

image

ஈரோட்டில் உள்ள கைம்பெண்கள், ஆதவற்ற பெண்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பதை 12ம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். விவரங்களுக்கு 0424 2261405 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார். இதை அதிகம் SHARE பண்ணுங்க!

News January 9, 2026

அத்தாணி அருகே வாய்க்காலில் விழுந்து ஒருவர் பலி

image

அத்தாணியைச் சேர்ந்தவர் சந்தோஷ்(17) ஐடிஐ மாணவர் ஆவார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் கவுண்டம்பாளையம் என்னும் இடத்தில் வளைவில் திரும்பும் பொழுது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வாய்க்காலுக்குள் விழுந்தது. இதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 9, 2026

ஈரோடு: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 9, 2026

ஈரோடு: டிக்கெட் வேணுமா..‘Hi’ சொல்லுங்க

image

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுவர டிக்கெட் முன்பதிவு செய்யலயா? உடனே 94440-18898 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க. அதில் கேட்கும் ஆப்சன்களை கிளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பேருந்து இயக்கம் தொடர்பான புகார்களுக்கு 94450-14436 (அ) 1800 425 6151 என்ற எண்ணை அழைக்கலாம். (SHARE)

News January 9, 2026

ஈரோடு அருகே இளைஞர் சம்பவயிடத்திலே பலி

image

ஈரோடு, எல்லப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் சாயத் தொழிற்சாலையில் பவானியைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் வர்ணம் பூசும் பணியில் இருந்தார். சிமெண்ட் அட்டையின் மீது நின்று வர்ணம் பூசி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து நிகழ்வு இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 9, 2026

ஈரோடு: குழந்தை திடீர் பலி

image

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு அருள்மொழி (1½) என்ற ஆண் குழந்தை உள்ளது. இக்குழந்தைக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனால் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை பெற்றோர் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!