India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டத்தில், தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்படுகிறதா என பல்வேறு நிறுவனங்களில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் துறையினா் நேற்று ஆய்வு நடத்தினா். இதில் மொத்தம் 105 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டு, விடுமுறை அளிக்காத 82 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் திருஞானசம்பந்தம் தெரிவித்துள்ளாா்.
ஈரோட்டில் நாளை (ஆக.17) மின்தடை அறிவிப்பு. காலை 9 முதல் மதியம் 2 வரை: சத்தி, காந்திநகர், நேரு நகர், ரங்கசமுத்திரம், பேருந்துநிலையம், கோணமூலை, விஜபி நகர், செண்பகபுதூர், உக்கரம், சுண்டக்காம்பாளையம், சிக்கரசம்பாளையம், அய்யன்சாலை. காலை 9 முதல் மாலை 5 வரை: அந்தியூர், பர்கூர், தவிட்டுபாளையம், நகலூர், கொண்டையம்பாளையம், தோப்பூர், எண்ணமங்கலம், வெள்ளித்திருப்பூர், பிரம்மதேசம், காட்டூர், சங்கராபாளையம்.
ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றிவந்த 4 காவல் துணை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு பதிவேடுகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஆறுமுக,ம் பவானி காவல் துணை கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி, கோபி காவல் துணை கண்காணிப்பாளர், ஈரோடு டவுன் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெய்சிங் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார். பவானி நீரேற்று நிலையப் பகுதியில் இதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. 2019இல் இத்திட்டத்திற்கு அப்போதைய முதல்வர் இபிஎஸ் ரூ.1,652 கோடி ஒதுக்கிய நிலையில், இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக தற்போது அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மக்களே ஷேர் பண்ணுங்க!
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரம் வழங்கக்கூடிய பவானிசாகர் அணை நிரம்பியுள்ளது. இந்நிலையில் இன்று விவசாயத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமி தண்ணீரை திறந்து விட்டார். இதில் ஈரோடு தொகுதி எம்.பி பிரகாஷ் உட்பட முக்கிய பிரமுகர்களும் விவசாய சங்க பிரதிகளும் கலந்து கொண்டனர். 120 நாள் தண்ணீர் திறக்க உத்தரவு.
அந்தியூர் பெரிய ஏரியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் படகு இல்லம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவற்றை இன்று அந்தியூா் ஏஜி வெங்கடாசலம் எம்எல்ஏ கலந்து கொண்டு பார்வையிட்டார். அப்போது, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரியிடம் கேட்டுக் கொண்டார். படகு இல்லம் ஆரம்பித்தால் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சுதந்திரத் திருநாளில் வழங்கப்படும் தமிழக அரசின் 2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர்” விருது பெறவுள்ள சுதந்திர போராட்ட வீரரும், தியாகியுமான குமரி அனந்தனை காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக செய்தி துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தியாகி குமரி அனந்தன் வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து பட்டாடை போர்த்தி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கனரா வங்கியின் மூலம் 18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் சுயதொழில் தொடங்குவதற்காக கோழி வளர்ப்பு பயிற்சி 10 நாட்கள் இலவசமாக உணவு உடையுடன் வழங்குகின்றன. இப்பயிற்சியானது ஈரோட்டில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுபவர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்தியாவின் 78வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தின விழா அமைதியான முறையில் நடைபெறும் வகையில் மாவட்ட போலீஸ் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஈரோடு இரயில்வே போலீசார் சார்பில் காவிரி ஆற்றில் உள்ள இரயில்வே இரும்பு பாலத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.