Erode

News September 24, 2024

PF குறித்த குறைதீர் கூட்டம்

image

பெருந்துறை அடுத்த ஈங்கூர் அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி, மாவட்ட அளவிலான வருங்கால வைப்பு நிதி குறித்த விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை உறுப்பினர்கள் (ம) தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்து பயன்பெறலாம் என ஈரோடு மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் வீரேஷ் தெரிவித்துள்ளார்.

News September 24, 2024

இப்பகுதியில் மின்தடை அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் மின்பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், சிப்காட் துணை மின்நிலையம், கங்காபுரம் துணை மின்நிலையம், சூரியம்பாளையம் துணை மின்நிலையம், பெரும்பள்ளம் துணை மின்நிலையம், வரதம்பாளையம் துணை மின்நிலையம், மாக்கினாங்கோம்பை துணை மின்நிலையம், பெரிய கொடிவேரி துணை மின்நிலையத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 23, 2024

குவிண்டால் மஞ்சள் ரூ.12,929 வரை ஏலம்

image

ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மஞ்சள் ஏலம் இன்று நடைபெற்றது. இதற்கு 32 மஞ்சள் மூட்டைகள் கொண்டு வரப்பட்டதில் 2 மூட்டைகள் ஏலம் போனது. இதில் விரலி மஞ்சள் குவிண்டால் (100 கிலோ) ஒன்று ரூ.11 ஆயிரத்து 099 முதல் ரூ.12 ஆயிரத்து 929 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.9 ஆயிரத்து 788 முதல் ரூ.12 ஆயிரத்து 399 வரைக்கும் விற்பனை ஆனது.

News September 23, 2024

மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

image

ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செப்.23) நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத் திட்டம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை (ம) காவல் துறை நடவடிக்கை போன்ற பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து ஆட்சியர் பெற்று கொண்டார்.

News September 23, 2024

சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

image

சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார் (20). இவர் சத்தியமங்கலத்தில் இருந்து தனியார் பஸ்சில் கோபிக்கு இன்று காலை பஸ்சின் படியில் நின்று பயணம் செய்தார். அப்போது, புதுவள்ளிபாளையம் பகுதியில், கோபி நோக்கி பைக்கில் சென்ற சண்முகம் என்பவர் மீது நவீன்குமார் விழுந்துள்ளார். இதில் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுபற்றி கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 23, 2024

நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு நினைவஞ்சலி

image

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் நினைவு தினத்தை ஒட்டி இன்று ஈரோட்டில் அவரது தீவிர ரசிகர்கள், அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் ஆதரவற்ற 25 பேருக்கு உணவு வழங்கினர் . டிக்கடை வைத்திருக்கும் அவரது ரசிகர், தனது கடை முழுவதும் நடிகையின் புகைப்படங்களைக் கொண்டு அலங்கரித்துள்ளார். சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளுக்கும் நலத்திட்ட உதவிகள் செய்து வருவதாக நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

News September 23, 2024

ஈரோட்டில் 74 போலீசார் பணியிட மாற்றம்

image

ஈரோடு மாவட்டத்தில், போலீசாரின் விருப்ப பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 17 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், 32 தலைமை காவலர்கள் மற்றும் முதல்நிலை காவலர்கள் உள்பட மொத்தம் 74 பேர் பணியிட மாற்றம் செய்து, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, சூரம்பட்டி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கணேசன் மொடக்குறிச்சி காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News September 23, 2024

மினி டெம்போ கவிழ்ந்து 19 பேர் படுகாயம்

image

ஈரோடு, அந்தியூர் அருகே கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் சென்ற மினி டெம்போ கவிழ்ந்தில் 11 பெண்கள் உட்பட 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அந்த வாகனத்தின் ஸ்டீயரிங் லாக் ஆனதாக கூறப்படும் நிலையில், ஆலயங்கரடு என்று இடத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக சென்று அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News September 23, 2024

முருகன் மலை கோவிலில் கிருத்திகை சிறப்பு

image

அம்மாபேட்டை அடுத்த வெள்ளக்கரட்டூரில் உள்ள வெள்ளிமலையில், மிகவும் சிறப்பு வாய்ந்த தண்டாயுதபாணி (முருகன்) திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று மாலை, கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

News September 22, 2024

அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

image

நம்பியூர், ஒழலக்கோயில் ஊராட்சி மலையப்பாளையத்தில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர்கள் தம்பி(எ)சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நகர, பேரூர், ஒன்றிய மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!