India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோடு மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்<

ஈரோடு மக்களே, யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள 173 Generalist and Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். இப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் வரும் பிப்.2ம் தேதிக்குள் இந்த லிங்கை <

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கணபதிபாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், சாணார்பாளையம், வேலம்பாளையம், சின்னமாபுரம், பாசூர், காங்கேயம்பாளையம், ராக்கியாபாளையம், கல்யாணிபுதூர், வேங்கியம்பாளையம், உத்தாண்டிபாளையம், பெரிய வீரசங்கிலி, சின்ன வீரசங்கிலி, கைக்கோல்பாளையம், கினிப்பாளையம், கரட்டூர், பாப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

சென்னிமலை அருகே 14வயது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், தாய் அவரை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமி 22 வார கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. விசாரணையில், கடந்த ஜூன் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த கௌரிசங்கர்(19) என்ற வாலிபர், சிறுமியை மிரட்டி நள்ளிரவில் பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமானது. இதுகுறித்து தாய் அளித்த புகாரின் பேரில், சென்னிமலை போலீஸார் வாலிபர் கைது செய்தனர்.

பவானிசாகர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, பவானிசாகர் போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி எரங்காட்டூர் சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில், ஆய்வு செய்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்ததை கண்டறிந்தனர். மேலும் கடை உரிமையாளர் தாஹிரா பானு என்பவரை கைது செய்த போலீசார், 4000 ரூபாய் மதிப்புள்ள 6 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது.<

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். (ஷேர் பண்ணுங்க)

ஈரோடு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் ஈரோடு மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0424-2431020 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

பவானி அருகே அந்தியூர் – மேட்டூர் பிரதான சாலையில் பூனாட்சி பகுதியில் சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து புளிய மரத்தில் மோதி தலைக்குப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த இருவர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.