India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் வசித்து வரும் சுரேந்தர் என்ற மாணவன் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் 7.5%இல் தேர்ச்சி பெற்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அவருக்கு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.எ செங்கோட்டையன் அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவில் சட்ட உதவி பாதுகாப்பு அமைப்பு பிரிவுக்கு, துணை தலைமை சட்ட உதவியாளராக பணியாற்ற தகுதியான வழக்கறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10/10/2024 ஆகும். மேலும் தகவலுக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்ற இணையதளமான https://erode.dcourts.gov.in முலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நிலமற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பு விவசாய தொழிலாளர்களுக்கு, நிலம் வாங்க சந்தை மதிப்பில் 50% (அ) ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. தாட்கோ இணைய தளமான www.tahdco.com முகவரியில் விண்ணப்பிக்கலாம். முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு ஈரோடு மாவட்ட தாட்கோ அலுவலகம் அல்லது 0424-2259453 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
திருச்சூரிலிருந்து பள்ளிபாளையம் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி ஒன்று 7 நபருடன் வந்து கொண்டிருந்தது. அப்போது, லாரி பல்வேறு இடங்களில் மோதி நிற்காமல் சென்றது. இதனையடுத்து விரட்டிய போலீசார், துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மேலும், லாரியில் ரூ.65 லட்சம், பயங்கரம் ஆயுதங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
தாளவாடி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக வெங்கடசாமி மற்றும் சிறப்பு பிரிவு தலைமை காவலராக இளங்கோவன் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவரும் 2 நாட்களுக்கு முன் தனிப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இருவரும் தாளவாடியில் சூதாட்ட கும்பலிடம் பணம் வாங்கி பிரித்து கொண்டது தெரிய வந்தது. எனவே 2 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி., ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு, கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகஸ்தூரி அரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் நடப்பாண்டு பிரம்மோத்சவ தேர்த்திருவிழா, அக்டோபர் 5ஆம் தேதி துவங்குகிறது. இதில், தினசரி யாகசாலை பூஜை, திருமஞ்சனம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறஉள்ளது. மேலும் அக்.11ஆம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவம் மற்றும் நிகழ்வான தேரோட்டம், அக்.12ஆம் தேதி காலை நடைபெறுகிறது.
தமிழகத்தில் சைபர் குற்றங்கள் தடுப்பு மற்றும் குற்றவாளிகளை கண்டுபிடித்தல் நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தனர். இவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதனை தொடர்ந்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் நேற்று சைபர் கிரைம் காவல்துறையினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
ஈரோட்டில் உள்ள நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் டூ பயின்ற ஆ.செங்கதிர் செல்வன் என்ற மாணவன் கால்நடை மருத்துவ பிரவில் தமிழக அரசின் 7.5% அடிப்படையில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் தற்போது சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து படித்து வருகிறார். மாணவனை பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இனி அனைத்து இடுபொருட்களையும் விவசாயிகள் ஏ.டி.எம்., கார்டு மற்றும் யு.பி.ஐ., மூலம் எளிதில் பெற முடியும். முதன்மை விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை 100 சதவீதம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே பண பரிவர்த்தனை செய்ய வாய்ப்பில்லை என ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.