Erode

News October 19, 2024

தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

ஈரோடு, வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில், ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், இன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். எனவே தனியார் துறையில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் பங்கேற்று பயன் பெறலாம் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News October 19, 2024

ஈரோட்டில் பனை விதைகள் நடும் விழா

image

தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நலவாரியத்தின் சார்பில், திண்டல், கதிரம்பட்டி – பெரும்பள்ளம் ஏரிக்கரையில் 1 லட்சம் பனை விதைகள் நடும் விழா இன்று நடைபெற உள்ளது. இதற்கு தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நலவாரியத்தின் தலைவர் நாராயணன் தலைமை வகிக்கிறார். அமைச்சர் முத்துச்சாமி நிகழ்வை துவக்கி வைக்கிறார். ஈரோடு எம்.பி., கே.இ.பிரகாஷ், ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர்.

News October 19, 2024

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

image

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (20.10.24), ஈரோடு – மணல்மேட்டில் உள்ள மாவட்ட அலுவலகம், கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் குமார்முருகேஷ் தலைமை வகிக்கிறார். எனவே இக்கூட்டத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட திமுகவினர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

News October 18, 2024

போக்குவரத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை

image

சென்னிமலையில் இன்று பெருந்துறை போக்குவரத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரு இளைஞர் புல்லட் வண்டியில் செல்லும்போது வெடிச்சத்தம் போன்ற ஒரு அதிபயங்கர சத்தம் கேட்டுக் கொண்டே சென்றது. இதனைக் கண்ட போக்குவரத்து போலீசார், அந்தப் பைக்கை ஓட்டி வந்த இளைஞருக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

News October 18, 2024

கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி

image

கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்வார்கள். அங்கு படகு சவாரி, அணையிலிருந்து கொட்டும் நீரில் குளிப்பது போன்ற சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்வார்கள். கடந்த 4 நாட்களாக கனமழையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது சுற்றுலா பயணிகள் செல்வதற்கு இன்று முதல் பொதுப்பணித்துறை அனுமதி வழங்கி உள்ளது.

News October 18, 2024

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்டோபர் 23ஆம் தேதி முதல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ (பிரிலிம்ஸ்) போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை https://forms.gle/13skgPbY9TZk5Zf18 என்ற லிங்க்கில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News October 17, 2024

ஈரோடு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு 

image

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் (காதுகேளாதவர்கள்) ஓட்டுனர் உரிமம் பெற்றுக்கொள்ள வரும் அக்டோபர் 19ஆம் தேதி (சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்கள் மற்றும் ஆதார் உடன் இணைந்த அலைபேசியுடன் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News October 17, 2024

ஈரோட்டில் 93 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி

image

தீபாவளி வரும் அக்டோபர் 31 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோட்டில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கோரி ஆன்லைனில் 236 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து தற்போது வரை 93 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி அளித்துள்ளனர்.

News October 17, 2024

ஈரோட்டில் உலக தர நாள் கருத்தரங்கு 

image

இந்திய தர நிர்ணயம் அமைப்பின் கோவை அலுவலகம் சார்பில் உலகத் தர நாள் கருத்தரங்கு நேற்று ஈரோட்டில் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் 150-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

News October 17, 2024

ஒரத்துப்பாளையம் அனை ஒரே நாளில் 16 அடி உயர்வு

image

சென்னிமலையில் உள்ள ஒரத்துப்பாளையம் அணையானது ஒரே நாளில் 16 அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அணையை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகமாக காணப்பட்டது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என பொதுப்பணித்துறையினர் ஆற்றங்கரை ஓரம் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டனர். மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் என கூறினர்.

error: Content is protected !!