India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தவெக-வின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, ஈரோட்டில் தவெக சார்பில் கொடிக்கம்பம் நடப்பட்டது. கட்சிக்கொடி ஏற்ற மாநகராட்சியில் கட்சி நிர்வாகிகள் அனுமதி கடிதம் கொடுத்துள்ளனர். இந்நிலையில், கட்சி கொடி ஏற்ற முன்னேற்பாடுகள் நடந்த வந்த நிலையில், போலீசார் அங்கு சென்று உரிய அனுமதி இல்லாததால் கொடியேற்று விழாவை நடத்துவதற்கு தடை விதித்தனர்.
ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டி, மீண்டும் கல்லூரியில் வந்து நிறைவு பெற்றது. மாரத்தான் போட்டியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு ஆகியோர் பங்கேற்று ஓடினர்.
தொடக்க விழா நிகழ்ச்சியில், ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் கலந்து கொண்டார்.
பாராளுமன்றத்தில் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரம் தொடர்பான உறுப்பினர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் லோக்சபாவில் 21 பேரும், ராஜ்யசபாவில் 10 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் லோக் சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே திமுகவினர் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் நேற்று பெய்த மழையால் வரட்டுப்பள்ளம் அணை முழு கொள்ளளவை எட்டியது. எனவே இன்று காலை முதல் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே வரட்டுப்பள்ளம் வரட்டுப்பள்ளம் அணையின் உபரிநீர் செல்லும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் குற்ற வழக்கு தொடர்வு துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில், காலியாக உள்ள ஒரு உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்கள் மற்றும் இதற்கான விண்ணப்பத்தினை https:// erode.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வரும் செப்.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் வணிகர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு விற்பனை செய்ய பட்டாசு விற்பனை உரிமம் பெற பொது இ-சேவை மையங்களில் மூலம் தகுந்த ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சேவை கட்டணமாக 0070-60-109-ஏஏ-22738 கணக்கில் ரூ.600 செலுத்தியதற்கான ரசீது உடன் அக்டோபர் 12ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தமிழக பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்திற்கு இன்று (29.09.24) பல்வேறு பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எம்.கிசான் திட்டத்தில் விவசாயிகள் ஆதார் விபரங்களை சரிபார்த்து உறுதி செய்தால் மட்டுமே, இத்திட்டத்தில் தொடர்ந்து நிதியுதவி பெற முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாத விவசாயிகள் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு துணை மின் நிலையத்தில் நாளை(29.9.24) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே குமலன்குட்டை பஸ் நிறுத்தம், பாலக்காடு, பெருந்துறை சாலை, வி.ஐ.பி. காலனி, திரு.வி.க.வீதி, ராணா லட்சுமணன் நகர், ஆசிரியர் காலனி பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு மின்பகிர்மான வட்ட நகரிய செயற் பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில், நடப்பாண்டில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்வதற்காக நெல் விதைகள் 87 மெ.ட(மெட்ரிக் டன்), சிறுதானியங்கள் 39 மெ.ட, பயறுவகைகள் 16 மெ.ட, எண்ணெய் வித்துக்கள் 43 மெ.ட இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இரசாயன உரங்களான யூரியா 6652 மெ.ட, டி.எ.பி 1399 மெ.ட, பொட்டாஷ் 1827 மெ.ட, காம்ப்ளக்ஸ் 11695 மெ.ட இருப்பில் உள்ளது என ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.