India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இன்று (நவ.14) குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு, குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்தல் தொடர்பான நடைபயணம் துவக்கி வைக்கப்பட்டது. இதனை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த வாசகங்களுடன் மாணவர், மாணவிகள் பங்கேற்றனர்.
ஈரோடு, கொல்லம்பாளையத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், கம்பியூட்டர் டேலி இலவச பயிற்சி வகுப்பு நவம்பர் 21ஆம் தேதி முதல் டிசம்பர் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவா்கள் 0424-2400338, 8778323213, 7200650604 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள கணக்காளர், சமூக பணியாளர், புறத்தொடர்பு பணியாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில், தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு erode.nic.in என்ற ஈரோடு மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தகுந்த ஆவணங்களுடன் நாளை (நவ.15) மாலை 5:30 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும், பிரதமரின் பயிா் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈரோடு, கருங்கல்பாளையம் – காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், ஈரோடு மாநகராட்சி இளைஞர் மேம்பாட்டு மையம் சார்பில், இந்திய குடிமை பணி தேர்வுக்கு கற்றல் வழிகாட்டுதல் மற்றும் பகுப்பாய்வு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இலவசமாக நவம்பர் 16ஆம் தேதி நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் https://www.erodesmartcity.org/participant.registration/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு, கருங்கல்பாளையம் – காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், ஈரோடு மாநகராட்சி இளைஞர் மேம்பாட்டு மையம் சார்பில், இந்திய குடிமை பணி தேர்வுக்கு கற்றல் வழிகாட்டுதல் மற்றும் பகுப்பாய்வு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இலவசமாக நவம்பர் 16ஆம் தேதி நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் https://www.erodesmartcity.org/participant.registration/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை பரவலாக மிதமான மழை பெய்தது. இதில் மேட்டுக்கடை, வேப்பம்பாளையம், நஞ்சனாபுரம், பவளத்தான்பாளையம், சாணார்பாளையம், வள்ளிபுரத்தான்பாளையம், ராயபாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. பின்னர் காலை 6:30 மணி வரை ஒரு சில இடங்களில் தூரல் மழை பெய்து வந்தது. இதேபோல் மாவட்டத்தில் அநேக இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்துவருகிறது.
ஈரோடு சத்தி ரோட்டில் தனியார் ஹோட்டல் உள்ளது. நேற்றிரவு 7 மணிக்கு ஹோட்டல் நிர்வாகத்திற்கு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. அதில் ஹோட்டலுக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது, அது 10 மணி அளவில் வெடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சோதனை செய்ததில் அது பொய்யான மிரட்டல் என்பது தெரியவந்தது. இதனால் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
ஈரோட்டில் தேங்காயின் விலை ஏறு முகமாகவே உள்ளது, கடந்த வாரம் கிலோ ரு 35 விற்பனையான தேங்காயின் விலை இந்த வாரம் கிலோ ரூ 55 க்கு விற்பனையானது, நேற்று ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தையில் கிலோ ரூ 55 க்கு விற்பனையானதால் இல்லத்தரசிகள் கவலையடைந்தனர். இதைப் பற்றி வியாபாரி ஒருவர் கூறும்போது குறைவால் வரத்து இந்த விலை ஏற்றம் என தெரிவித்தார்.
மோசடி செய்பவர்கள் தங்கள் பெயருக்கு வந்த, ஒரு கூரியர் பார்சலில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கூறி மக்களை அழைத்து ஏமாற்றுகிறார்கள். எனவே தங்கள் மீது வழக்கு சிக்கலை தவிர்க்க பணம் செலுத்துமாறு போலி போலீஸ் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களிடம் இருந்து உங்களுக்கு அழைப்புகள் வரலாம். அத்தகைய மோசடி செய்பவர்களுக்கு ஒருபோதும் பணம் அனுப்ப வேண்டாம் என ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.