India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும், நவம்பர் 20ஆம் தேதி காலை, 11:00 மணிக்கு ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஆர்.டி.ஓ., ரவி தலைமை வகிக்கிறார். இந்நிலையில், நிர்வாக காரணத்தால், நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிய வாக்காளர் பதிவு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்றவைகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில், மொடக்குறிச்சி வட்டம், லக்காபுரம், கணபதிபாளையம் மற்றும் சாமிநாதபுரம்புதூர் பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமினை ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இன்று கார்த்திகை முதல் நாள் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் வெளியூரிலிருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் ஐயப்பா ஐயப்பா என்று சரண கோஷமிட்டபடி பவானி மூன்று நதிகள் கூடும் கூடுதுறையில் குளித்துவிட்டு விநாயகர் முருகர் சிவன் துர்க்கை அம்மன் போன்ற தெய்வங்களை வழிபட்டு அவரவர் வண்டிகளுக்கு ஐயப்பா ஐயப்பா என்று கோஷமிட்டபடி பூஜை செய்து சென்றனர். இதனால் பவானி கூடுதுறை களைகட்டி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்தியூர் தாலுகா, எலச்சிபாளையம் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாதையன், இவரது மனைவி சின்னமாதி (20). இவரை பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கூட்டி வரும்போது பிரசவ வலி அதிகமானதால், எருமை குட்டை என்ற வனப்பகுதியில் (பர்கூர் அருகில்) இன்று அதிகாலை 2 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாக மறுசீரமைப்பு – 2024 ஒருங்கிணைப்புக் குழுவினை தொகுதி வாரியாக நியமித்து, அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இந்நிலையில், ஈரோடு கிழக்கு – அர.அப்துர்ரஹ்மான், ஈரோடு மேற்கு – கி.கிள்ளிவளவன், மொடக்குறிச்சி – அ.வசந்த், பெருந்துறை – வீர.ஆதித்தியன், பவானி – தனலட்சுமி, கோபி – சுசி.கலையரசன், பவானிசாகர், அந்தியூர் – ஆல்டிரின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு எல்லாம்பாளையம் குழந்தைகள் நல மையத்தில் இன்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்து கொண்டு ஊட்டச்சத்து மிக்க பொருள்களை குழந்தைகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் ராஜகோபால் சுன்கரா உடன் இருந்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2025-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் போன்றவற்றை வாக்காளர்கள் மேற்கொள்வதற்கு வசதியாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை (நவ.16) மற்றும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
பவானி கோணவாய்க்கால் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் முன்பு, சித்தோடு பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் (30), இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த காமராஜ் (29) ஆகிய இருவர் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்தனர். தகவலின் அடிப்படையில் பவானி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 350 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
தேசிய அளவிலான சப்-ஜூனியர் தரவரிசை பாட்மின்டன் போட்டி ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் ஈரோட்டைச் சேர்ந்த அனன்யா அருண் மற்றும் மதுரையைச் சேர்ந்த சச்சின் ஆகியோர் 17 வயதுக்குள்பட்ட கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்றனர். இறுதி ஆட்டத்தில் 21-18, 21-14 என்ற புள்ளி கணக்கில் தில்லி அணியை வீழ்த்தி தமிழக அணி வீரர்கள் அனன்யா, சச்சின் ஆகியோர் தங்கம் வென்றனர்.
சத்தி பேருந்து நிலையத்திற்கு இன்று காலை தாளவாடியில் இருந்து ஈரோடு செல்வதற்காக அரசு பேருந்து ஒன்று வந்தது. அப்போது பூ மார்க்கெட்டில் பூ வாங்கிக்கொண்டு பஸ் ஏறுவதற்காக நடந்து சென்ற புளியம்பட்டியை சேர்ந்த சாவித்திரி என்பவர் மீது பஸ்சின் முன் சக்கரம் ஏறியதில் படுகாயமடைந்தவர். இந்நிலையில் சத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.