India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோபி அருகே புஞ்சை துறையம்பாளையத்தைச் சேர்ந்த தம்பதி முருகன் மற்றும் சித்ரா. இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாத காரணத்தால் விரக்தியில் முருகன் தனது வீட்டில் தூக்கிட்டு கொண்டார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறிய நிலையில் சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்து மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் ஓம்காா் பாலாஜி கைதைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் பெருந்துறையில் நேற்று நடைபெற்றது.பெருந்துறை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் ரங்கராஜன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில இலக்கிய அணி செயலாளா்,மாநில செயலாளா், மாநில பொதுச்செயலாளா் உள்பட 35 பேரை போலீசார் கைதுசெய்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கடம்பூர் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, மான், கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சற்று சிறிது நேரத்திற்கு முன்பு கே.என்.பாளையம் – கடம்பூர் மலைப்பாதையில் சாலையோர தடுப்புச்சுவரில் சிறுத்தை ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் செல்போனில் போட்டோ எடுத்து கொண்டு செல்கின்றனர்.
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பழனிக்கு 20.11.2024 புதன்கிழமை அன்று நண்பகல் 1.00 மணிக்கு கரும்புச் சர்க்கரை கொள்முதல் செய்ய உள்ளதால் விவசாயிகள் கரும்புச் சர்க்கரையை 20.11.2024 முற்பகல் 11.00 மணிக்குள் கவுந்தப்பாடி விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பெருந்துறை வட்டம், ஈங்கூர் குட்டப்பாளையம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கருவளூர் மாரியம்மன் பட்டத்தரசி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. இதில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் JK (எ) S.ஜெயக்குமார் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் அதிமுக கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
ஈரோடு ரயில் நிலையம் நடைமேடை 1இல் நேற்று பாதுகாப்பு படை வீரர்கள் அறைக்கு அருகில் தலை துண்டாகி ஒருவர் சடலமாக கிடந்தார். ரயில் நிலையம் மேலாளர் கொடுத்த புகாரின்பேரில் ரயில்வே போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு வயது 60 இருக்கும். அவர் நீல நிற ஆடை அணிந்திருந்தார். ரயிலில் அடிபட்டு இருந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
தாளவாடி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது 3 இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி வாங்கி கர்நாடக மாநிலத்துக்கு விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. விசாரணையில் கலீம் ஷெரிஃப், ஆரிப் கான், முஜீப் அகமது என்பவர்களிடமிருந்து 390 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 3 இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
➤அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு ➤பவானி: இறந்தவர் உடலுடன் சாலை மறியல் ➤விவசாயிகள் குறைதீர் கூட்டம் தேதிமாற்றம் ➤காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது ➤வாக்காளர் சிறப்பு முகாம் கலெக்டர் ஆய்வு ➤ஈரோட்டில் இடியுடன் கூடிய கனமழை ➤நள்ளிரவில் ஆம்புலன்ஸில் பிரசவம் ➤ஈரோட்டில் பூண்டு விலை ஏற்றம் ➤மாவட்டத்தில் பரவலாக பனிப்பொழிவு.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்கு உதவியவர்களுக்கு ஆண்டு தோறும் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டுக்கான விருது 2025 திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. எனவே தகுதியான நபர்கள், ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நவம்பர் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பவானி அருகே ஒரிச்சேரி புதூர் பகுதியைச் சேர்ந்த கருப்பாயி என்பவர் நேற்று உடல் நலக்குறைவால் இறந்தார். இவரது உடலை அடக்கம் செய்வதற்காக ஒரிச்சேரி பவானி ஆற்றங்கரை ஓரம் கொண்டு சென்றனர். அங்கு மயான ஆக்கிரமிப்பு இருந்தது. அதனால் அப்பகுதி பொதுமக்கள் ஒரிச்சேரி புதூர் மயானம் செல்லும் சாலையில் இன்று இறந்தவர் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பவானி டிஎஸ்பி சந்திரசேகர் விசாரணை செய்துவருகிறார்.
Sorry, no posts matched your criteria.