India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோட்டில் மாநகராட்சி, சமூக நலத்துறை சார்பில் குழந்தைகள் திருமண தடுப்பு குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், குழந்தை திருமணம் சட்டம் குறித்தும், குழந்தை திருமணத்தினால் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாமில், மாநகராட்சியின் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட ஆண், பெண் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் மொடக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஈஞ்சம்பள்ளி ஊராட்சியில் செயல்பட்டு வரும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், முகாம் வாழ் மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
சென்னையில் அண்ணா தொழில் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான புத்துளிர் கண்காட்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஈரோடு கொங்கு நேஷனல் பள்ளி மாணவர்கள் அப்சல் அலி, ருத்ர மூர்த்தி, அப்துல் காதர் மாநில அளவில் இரண்டாம் பரிசை பெற்றனர். அவர்களுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசு வழங்கினார்.
சென்னிமலையில் 36 கைத்தறி கூட்டுறவுச் சங்கங்கள் செயல்படுகின்றன. 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உறுப்பினராக இருந்து கைத்தறி நெசவு தொழில் செய்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை காரணமாக கைத்தறியின் அனைத்து உபகரணங்களும் மரத்தால் செய்யப்பட்டுள்ளதால் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் அவற்றை இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது என கைத்தறி நெசவாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
1.அந்தியூரில் போதை மாத்திரையை சிரஞ்சு மூலம் ஏற்றிய ஐவர் கைது
2.ஈரோடு வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22தேதிக்கு ஒத்திவைப்பு
3.சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
4.சிறுமிக்கு திருமணம்: 5 பேர் மீது வழக்கு
5.அதிமுகவில் இணைந்த முன்னாள் திமுக கவுன்சிலர்
அந்தியூர்வெள்ளப்பிள்ளையார் கோயில் அருகே இன்று 5 பேர் கொண்ட கும்பல் போதை மாத்திரையை தண்ணீரில் கரைத்து சிரஞ்சு மூலம் ஏத்தியதாக ரோந்து பணியில் இருந்த எஸ்.ஐக்கு செபஸ்தீயான் மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களை கைது செய்து அந்தியூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார்.
ஈரோட்டில் 20.11.2024 அன்று நடைபெற இருந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். மீண்டும் 22.11.2024 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் கரட்டூர் பூ மார்க்கெட் இயங்கிவருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி இன்றும் (நவ. 20) பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு சத்தியமங்கலம்,சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் சுமார் 8 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நிலவரம்:கிலோக்கு மல்லிகை: 1200/1900 முல்லை: 720/850 காக்கடா: 550/650 க்கு விற்பனையானது.
ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையராக பணியாற்றிய (அமலாக்கம்) திருஞானசம்பந்தம், ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையராக (சமரசம்) பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையராக பணியாற்றிய ஜெயலட்சுமி, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையராக (அமலாக்கம்) நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு தொழிலாளர் துறையினர் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
ஈரோட்டில் வரத்து குறைந்துள்ளதால் முருங்கைக்காயின் விலை கிலோ ரூ 120க்கு விற்பனையானது. ஈரோட்டில் கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது. நேற்று ஈரோட்டில் முருங்கைக்காயின் விலை கிலோ 120-க்கு விற்பனையானதால் பொதுமக்கள் சற்றே கலக்கமடைந்துள்ளனர். இது குறித்து வியாபாரி ஒருவர் தெரிவித்தபோது, பனிப்பொழிவால் விளைச்சல் குறைவு எனவும், மேலும் காய்கறிகளின் விலை உயரக்கூடும் எனவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.